தமிழ்நாடு (Tamil Nadu)

தேனி மாவட்டத்தில் மீண்டும் கனமழை: கொட்டக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கால் பொதுமக்களுக்கு தடை

Published On 2023-12-08 05:07 GMT   |   Update On 2023-12-08 05:07 GMT
  • கும்பக்கரை அருவியிலும் இன்று 36-வது நாளாக சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
  • சண்முகாநதி அணை நிரம்பி முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் அந்த அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

கூடலூர்:

தேனி மாவட்டத்தில் கடந்த மாதம் பெய்த வடகிழக்கு பருவமழை சற்று ஓய்ந்திருந்த நிலையில் நேற்று மீண்டும் பரவலாக கனமழை பெய்தது. போடி, பெரியகுளம், தேவதானப்பட்டி ஆகிய பகுதிகளில் பெய்த கனமழையால் சாலையில் மழை நீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.

குரங்கணி பகுதியில் பெய்த கனமழை காரணமாக கொட்டக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணைப்பிள்ளையார் நீர் வீழ்ச்சியில் தண்ணீர் அதிக அளவு செல்கிறது. இதனால் அங்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் கும்பக்கரை அருவியிலும் இன்று 36-வது நாளாக சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

சண்முகாநதி அணை நிரம்பி முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் அந்த அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 135.60 அடியாக உள்ளது. வரத்து 784 கன அடி. திறப்பு 1500 கனஅடி. இருப்பு 6017 மி.கன அடி. வைகை அணை நீர்மட்டம் 62.73 அடி. வரத்து 1327 கன அடி. திறப்பு 1639 கன அடி. இருப்பு 4146 மி.கன அடி.

மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55.40 அடி. வரத்து 149 கன அடி. திறப்பு 90 கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.37 அடி. வரத்து மற்றும் திறப்பு 48 கன அடி.

பெரியாறு 15.4, தேக்கடி 20, கூடலூர் 1.6, உத்தமபாளையம் 1.8, சண்முகாநதி அணை 2.6, போடி 62, சோத்துப்பாறை 14 மி.மீ. மழை அளவு பதிவானது.

Tags:    

Similar News