தமிழ்நாடு (Tamil Nadu)

நெய்வேலியில் போராடும் பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்- சீமான் வலியுறுத்தல்

Published On 2024-10-19 08:47 GMT   |   Update On 2024-10-19 08:47 GMT
  • கால் நூற்றாண்டு கோரிக்கையை நிறைவேற்றாமல் நிலக்கரி நிறுவனம் தொடர்ந்து ஏமாற்றி வருவது வன்மையாக கண்டனத்துக்குரியது.
  • அனைவரையும் உடனடியாகப் பணி நிரந்தரம் செய்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.

சென்னை:

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் பல ஆண்டுகளாகப் பணிபுரிந்து வரும் 10000 ஒப்பந்த தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கால் நூற்றாண்டு கோரிக்கையை நிறைவேற்றாமல் நிலக்கரி நிறுவனம் தொடர்ந்து ஏமாற்றி வருவது வன்மையாக கண்டனத்துக்குரியது.

ஆகவே தமிழர்களின் நிலத்தையும், வளத்தையும், உடல் உழைப்பையும் உறிஞ்சி ஆண்டிற்கு ரூ.2,378 கோடி நிகர லாபம் ஈட்டும் நெய்வேலி நிலக்கரி நிறுவனம், ஒப்பந்த பணியாளர்கள் அனைவரையும் உடனடியாகப் பணி நிரந்தரம் செய்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Tags:    

Similar News