தமிழ்நாடு (Tamil Nadu)
நெல்லை அருகே அரசு ஒப்பந்ததாரர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை
- நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன் அலுவலகத்தில் நேற்று சோதனை நடத்தப்பட்டது.
- நெல்லை மாவட்டத்தில் பறக்கும் படையினரும், வருமான வரித்துறை அதிகாரிகளும் அதிரடி சோதனை ஈடுபட்டு வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தை சேர்ந்த பிரபல அரசு ஒப்பந்ததாரர் ஒருவரது வீட்டில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வள்ளியூர் அருகே உள்ள விஜயநாராயணம் பகுதியில் ஒப்பந்ததாரரின் பண்ணை வீட்டில் இந்த சோதனை இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது.
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்வதற்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்பதை அறிய நெல்லை மாவட்டத்தில் பறக்கும் படையினரும், வருமான வரித்துறை அதிகாரிகளும் அதிரடி சோதனை ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன் அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில் இன்று பிரதான கட்சி ஒன்றின் பிரமுகராக இருந்து வரும் அரசு ஒப்பந்ததாரர் ஒருவரது வீட்டில் நடத்தப்படும் சோதனையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.