தமிழ்நாடு (Tamil Nadu)

அனுமதியின்றி போராட்டம்- பா.ஜ.க.வினர் மீது வழக்குப்பதிவு

Published On 2024-06-23 05:32 GMT   |   Update On 2024-06-23 05:32 GMT
  • சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பா.ஜ.க. மாநில துணை தலைவர் கரு.நாகராஜன் தலைமையில் 500-க்கும் மேற்பட்டோர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
  • கோவையில் பா.ஜ.க. தலைமை அலுவலகம் முன்பு அனுமதியின்றி 500-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை:

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 56-ஆக உயர்ந்துள்ளது. மேலும் 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், தி.மு.க. அரசை கண்டித்து நேற்று மாநிலம் முழுவதும் பா.ஜ.க. சார்பில் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து தனியார் மண்டபங்களில் தங்க வைத்தனர்.

இந்நிலையில், சென்னை மற்றும் கோவையில் அனுமதியை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக பா.ஜ.க.வினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பா.ஜ.க. மாநில துணை தலைவர் கரு.நாகராஜன் தலைமையில் 500-க்கும் மேற்பட்டோர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவையில் பா.ஜ.க. தலைமை அலுவலகம் முன்பு அனுமதியின்றி 500-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னையில் 3 பிரிவுகளிலும், கோவையில் 4 பிரிவுகளிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News