தமிழ்நாடு (Tamil Nadu)

'சாம்சங்' தொழிலாளர்கள் வழக்கு நாளை விசாரணை- ஐகோர்ட் உத்தரவு

Published On 2024-10-15 02:50 GMT   |   Update On 2024-10-15 02:50 GMT
  • தங்களது சங்கத்தை பதிவு செய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
  • இந்த வழக்கிற்கு தமிழ்நாடு அரசும், தொழிற்சங்கங்கள் பதிவாளர், தொழிலாளர் நலத்துறை துணை ஆணையர் ஆகியோர் பதிலளிக்கும்படி உத்தரவிட்டு இருந்தார்.

சென்னை:

ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வரும் சாம்சங் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள், தங்களது சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தை பதிவு செய்ய கோரி தொழிற்சங்கங்கள் பதிவாளருக்கும், தொழிலாளர் நலத்துறை துணை ஆணையருக்கும் விண்ணப்பம் செய்தனர். ஆனால், இந்த கோரிக்கையை ஏற்கப்படவில்லை.

இதையடுத்து, தங்களது சங்கத்தை பதிவு செய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு கடந்த 30-ந்தேதி நீதிபதி மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கிற்கு தமிழ்நாடு அரசும், தொழிற்சங்கங்கள் பதிவாளர், தொழிலாளர் நலத்துறை துணை ஆணையர் ஆகியோர் பதிலளிக்கும்படி உத்தரவிட்டு இருந்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கை அவசர வழக்காக உடனே விசாரிக்க வேண்டும் என்று நீதிபதி மஞ்சுளா முன்பு மூத்த வக்கீல் என்.ஜி.ஆர்.பிரசாத் நேற்று ஆஜராகி கோரிக்கை விடுத்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கை நாளை (புதன்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உத்தரவிட்டார்.

Tags:    

Similar News