சசிகலாவை சந்தித்து உரிய நேரத்தில் பேசுவேன்- ஓ.பன்னீர்செல்வம்
- பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க. தொண்டர்கள் அனைவரும், ஒன்றாக இணைய வேண்டும் என்று விரும்புகின்றனர்.
- விரைவில் பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க. தொண்டர்கள் அனைவரையும் ஒன்றாக இணைப்பதற்கான பணிகள் தொடங்கி நடக்கும்.
ஆலந்தூர்:
அ.தி.மு.க.வில் இருந்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோர் ஏற்கனவே நீக்கப்பட்டு விட்டனர். டி.டி.வி. தினகரன் தனியாக கட்சி ஆரம்பித்து செயல்பட்டு வருகிறார். ஓ.பன்னீர் செல்வம், அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புகுழுவை நடத்தி வருகிறார்.
இதனால் அ.தி.மு.க. தொண்டர்களிடையே பிளவு ஏற்பட்டு உள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வால் ஒரு இடத்திலும் வெற்றி பெற முடியவில்லை. இதையடுத்து ஒன்றுபட்ட அ.தி.மு.க.வாக செயல்பட வேண்டும் என்று சசிகலாவும், ஓ.பன்னீர்செல்வமும் தொடர்ந்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம், இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு புறப்பட்டு சென்றார். முன்னதாக அவர் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க. தொண்டர்கள் அனைவரும், ஒன்றாக இணைய வேண்டும் என்று விரும்புகின்றனர்.
எனவே விரைவில் பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க. தொண்டர்கள் அனைவரையும் ஒன்றாக இணைப்பதற்கான பணிகள் தொடங்கி நடக்கும்.
நான் சசிகலாவை சந்திக்கும் நிகழ்ச்சி, உரிய நேரத்தில், தேவைப்படும்போது நாங்கள் சந்தித்து பேசுவோம்.
இவ்வாறு ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.