தமிழ்நாடு (Tamil Nadu)

பயிற்சியின்றி தவறாக பாடுகிறார்களே தவிர உள்நோக்கத்தோடு திராவிடத்தை தவற விட்டு பாடுவதாக தெரியவில்லை- தமிழிசை

Published On 2024-10-19 01:56 GMT   |   Update On 2024-10-19 01:56 GMT
  • “தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்” என்ற வரி விடுபட்டு பாடப்பட்டது.
  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட தமிழக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள்.

சென்னை:

சென்னை தூர்தர்ஷன் அலுவலகத்தில், தொலைக்காட்சி பொன் விழாவுடன் இந்தி மொழி மாதம் கொண்டாட்டத்தின் நிறைவு விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார். விழா தொடக்கத்தில் தேசிய கீதத்தை தொடர்ந்து, தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.

"தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்" என்ற வரி விடுபட்டு பாடப்பட்டது.

'திராவிடம்' என்ற சொல்லை வேண்டும் என்றே கவர்னர் விழாவில் தவிர்த்து இருக்கிறார்கள் என்ற சர்ச்சை இதனால் எழுந்து இருக்கிறது.

இந்த செயலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட தமிழக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள்.

இந்த நிலையில், பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியிருப்பதாவது:-

டிடி தமிழ் தொலைக்காட்சியில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடும் முறையை பார்த்தாலே பாடுபவர்கள் போதுமான பயிற்சியின்றி தவறாக பாடுகிறார்களே தவிர உள்நோக்கத்தோடு திராவிடத்தை தவறவிட்டு பாடுவதாக தெரியவில்லை என்று கூறியுள்ளார். 

Tags:    

Similar News