தமிழ்நாடு (Tamil Nadu)

டி.என்.எஸ்.வி.டி. சான்றிதழையும் கள அளவையர் பணி தேர்வுக்கு அனுமதிக்க வேண்டும்- ராமதாஸ் கோரிக்கை

Published On 2022-08-29 07:26 GMT   |   Update On 2022-08-29 07:26 GMT
  • தமிழக அரசு ஐ.டி.ஐ.களிலும் இந்த சான்றிதழ் வழங்கப்படுகிறது.
  • டி.என்.எஸ்.வி.டி. வழங்கும் ஐ.டி.ஐ. சான்றிதழ் பெற்றவர்களையும் டி.என்.பி.எஸ்.சி அனுமதிக்க வேண்டும்.

சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ள கள அளவையர் உள்ளிட்ட பணிகளுக்கு 1089 பேரை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கையில் தேசிய தொழிற்கல்வி மையம் வழங்கிய ஐ.டி.ஐ. சான்றிதழ் பெற்றவர்கள் மட்டும் தான் விண்ணப்பிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

டி.என்.எஸ்.வி.டி. சான்றிதழை மத்திய அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குனரகம் உள்ளிட்ட பல தேசிய, சர்வதேச அமைப்புகள் அங்கீகரித்துள்ளன. தமிழக அரசு ஐ.டி.ஐ.களிலும் இந்த சான்றிதழ் வழங்கப்படுகிறது.

எனவே கள அளவையர் உள்ளிட்ட பணிகளுக்கு டி.என்.எஸ்.வி.டி. வழங்கும் ஐ.டி.ஐ. சான்றிதழ் பெற்றவர்களையும் டி.என்.பி.எஸ்.சி அனுமதிக்க வேண்டும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க அவகாசம் முடிந்து விட்ட நிலையில், திருத்தப்பட்ட ஆள் தேர்வு அறிவிக்கையை டி.என்.பி.எஸ்.சி வெளியிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News