தமிழ்நாடு

சீமானின் வளர்ச்சி கவனம் பெறுகிறது... வைரமுத்து பதிவு

Published On 2024-06-10 02:46 GMT   |   Update On 2024-06-10 02:46 GMT
  • தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற்ற நாம் தமிழர் கட்சியையும் அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானையும் பாராட்டுகிறேன்.
  • இந்த வளர்ச்சியால் தமிழ்நாட்டு அரசியலில் அவரைப் பழிப்பது குறையாது ஆனால் இனி -கழிப்பது இயலாது.

சென்னை:

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி 8.19 சதவீத வாக்குகளை பெற்றுள்ளதால் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெற்றுள்ளது. இதையடுத்து சீமானுக்கு தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கவிஞரும், பாடலாசிரியருமான வைரமுத்து எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

மக்களவைத் தேர்தலில்

8.19 விழுக்காடு

வாக்குகள் பெற்றுத்

தேர்தல் ஆணையத்தின்

அங்கீகாரம் பெற்ற

நாம் தமிழர் கட்சியையும்

அதன் தலைமை

ஒருங்கிணைப்பாளர்

சீமானையும் பாராட்டுகிறேன்

ஆலின் விதையொன்று

தனித்து நின்று

ஓசையின்றித் துளிர்விடுவதும்

இலைவிடுவதும்போல

சீமானின் வளர்ச்சி

கவனம் பெறுகிறது

இந்த வளர்ச்சியால்

தமிழ்நாட்டு அரசியலில்

அவரைப்

பழிப்பது குறையாது

ஆனால் இனி -

கழிப்பது இயலாது

வாழ்த்துகிறேன்.

இவ்வாறு வைரமுத்து கூறியுள்ளார்.

Tags:    

Similar News