சென்னையில் 3 இடங்களில் பெண்கள் உரிமைத்தொகை வழங்கப்பட்டது- அமைச்சர்கள் உதயநிதி, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு வழங்கினார்கள்
- அமைச்சர் சேகர்பாபு 2 ஆயிரம் பெண்களுக்கு உரிமைத் தொகையை வழங்கினார்
- கலாநிதி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தாயகம் கவி, வெற்றி அழகன், ஜோசப் சாமுவேல் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
சென்னை:
சென்னையில் 3 இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் உரிமைத் தொகை வழங்கினார்கள்.
ராயப்பேட்டையில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 2 ஆயிரம் குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை வழங்கினார். நிகழ்ச்சியில் மேயர் பிரியா, பரந்தாமன் எம்.எல்.ஏ., மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ராதாகிருஷ்ணன், இந்தியன் வங்கி தலைமை பொது மேலாளர் சுதாகர் ராவ், சிறப்பு திட்டச் செயலாக்க அதிகாரி தாரேஸ் அகமது, சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் நிலைக்குழு தலைவர் நே.சிற்றரசு, மண்டலக் குழு தலைவர் மதன் மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சைதாப்பேட்டை ரங்க பாஸ்யம் தெருவில் நடந்த நிகழ்ச்சியில் 2 ஆயிரம் குடும்பத் தலைவிகளுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் உதவித்தொகை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., துணை மேயர் மகேஷ்குமார், பிரபாகர் ராஜா எம்.எல்.ஏ., மண்டலத் தலைவர்கள் கிருஷ்ண மூர்த்தி, துரைராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கொளத்தூர் வீனஸ் நகரில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபு 2 ஆயிரம் பெண்களுக்கு உரிமைத் தொகையை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கலாநிதி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தாயகம் கவி, வெற்றி அழகன், ஜோசப் சாமுவேல் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.