தமிழ்நாடு

எழும்பூர் ரெயில் நிலையத்தில் டிக்கெட் கவுண்டர் தற்காலிமாக இடமாற்றம்

Published On 2024-05-16 09:14 GMT   |   Update On 2024-05-16 09:14 GMT
  • சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் அதிநவீன வசதிகளுடன் உலகத்தரம் வாய்ந்ததாக மாற்றப்பட உள்ளது.
  • புறநகர் ரெயில் டிக்கெட் கவுண்டர்கள் தற்போது தற்காலிமாக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

சென்னை:

சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் ரூ.734.91 கோடி மதிப்பில் அதிநவீன வசதிகளுடன் உலகத்தரம் வாய்ந்ததாக மாற்றப்பட உள்ளது. இதற்கான மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.

இதையொட்டி எழும்பூர் வடக்கு பகுதியில் பழைய கட்டிடத்தில் இயங்கி வந்த புறநகர் ரெயில் டிக்கெட் கவுண்டர்கள் தற்போது தற்காலிமாக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

எழும்பூர் பூந்தமல்லி நெடுஞ்சாலையையொட்டியுள்ள மணியம்மை சிலை அருகில் உள்ள ரெயில்வே பாதுகாப்பு படை அலுவலகத்தையொட்டி இந்த டிக்கெட் கவுண்டர்கள் இன்று முதல் இயங்கி வருகிறது. 


Full View


Tags:    

Similar News