தமிழ்நாடு (Tamil Nadu)

திருப்பத்தூரில் பள்ளி, குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த சிறுத்தையால் பரபரப்பு

Published On 2024-06-14 12:02 GMT   |   Update On 2024-06-14 12:02 GMT
  • பள்ளியில் இருந்து மாணவ- மாணவிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
  • குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து மறைந்துள்ளது.

திருப்பத்தூரில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்குள் சிறுத்தை ஒன்று இன்றுமாலை திடீரென நுழைந்தது. இதை பார்த்ததும் மாணவ- மாணவிகள் அச்சம் அடைந்தனர். உடனே பள்ளி நிர்வாகம் மாணவிகளை உடனடியாக பள்ளியில் இருந்து பத்திரமாக வெளியேற்றினர்.

அதற்குள் அந்த சிறுத்தை அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. அப்போது ஒரு நபரை தாக்கியதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அந்த சிறுத்தை மரங்கள் அடர்ந்த பகுதியில் புகுந்து மறைந்துள்ளது. சிறுத்தை மறைந்துள்ள பகுதியில் இரண்டு கார்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அதில் ஐந்து பேர் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சிறுத்தையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News