தமிழ்நாடு (Tamil Nadu)

தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

Published On 2024-10-09 19:38 GMT   |   Update On 2024-10-09 19:38 GMT
  • தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவுக்கு தமிழக முதலமைச்சர் இரங்கல் தெரிவித்தார்.
  • ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

சென்னை:

பிரபல தொழிலதிபரான ரத்தன் டாடா வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.

இந்நிலையில், தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது:

ரத்தன் டாடாவின் மறைவால் ஆழ்ந்த வருத்தம். இந்திய தொழில்துறையின் உண்மையான கலங்கரை விளக்கமாக ரத்தன் டாடா விளங்குகிறார்.

அவரது தொலைநோக்கு தலைமை டாடா குழுமத்தை வடிவமைத்தது மட்டுமல்லாமல், நெறிமுறை வணிக நடைமுறைகளுக்கு உலகளாவிய அளவுகோலையும் அமைத்தது.

தேசத்தைக் கட்டியெழுப்புதல், கண்டுபிடிப்புகள் மற்றும் பரோபகாரம் ஆகியவற்றில் அவரது இடைவிடாத அர்ப்பணிப்பு மில்லியன் கணக்கான உயிர்களின் மீது அழியாத முத்திரையை பதித்துள்ளது.

இந்தியா ஒரு பிரம்மாண்டத்தை இழந்துவிட்டது. ஆனால் அவரது பாரம்பரியம் தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கும்.

அவரது இழப்பின் இந்த தருணத்தில் அவரது குடும்பத்தினருக்கும், சக ஊழியர்களுக்கும், ஒட்டுமொத்த டாடா குழுமத்திற்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News