தமிழ்நாடு (Tamil Nadu)

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: முதலமைச்சருக்கு ஆளுநர் பதிலடி

Published On 2024-10-18 15:41 GMT   |   Update On 2024-10-18 15:41 GMT
  • டிடி தமிழ் தொலைக்காட்சி அலுவலகத்தில் 'ஹிந்தி மாத' நிகழ்ச்சி இன்று பிற்பகலில் கொண்டாடப்பட்டது.
  • தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக தனது கண்டனத்தை பதிவு செய்தார்.

சென்னையில் உள்ள டிடி தமிழ் தொலைக்காட்சி அலுவலகத்தில் 'ஹிந்தி மாத' நிகழ்ச்சி இன்று பிற்பகலில் கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் 'தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்' என்ற வரி இடம்பெறாமல் விடுபட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக தனது கண்டனத்தை பதிவு செய்து இருந்தார்.

இதுகுறித்து கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், " ஆர்.என்.ரவி ஆளுனரா? ஆரியநரா?" என்று கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கருத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதிலடி அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-

இனவாத கருத்துக்கள், தவறான குற்றச்சாட்டுகளை அவசரகாதியில் முதலமைச்சர் பொது வெளியில் முன்வைத்ததால் அதற்கு எதிர்வினையாற்றும் கட்டாயத்தில் இருக்கிறேன்.

முதல்வர் வெளியிட்ட வருத்தமளிக்கக் கூடிய பதிவு ஒன்றில், எனக்கு எதிராக இனவாத கருத்தைத் தெரிவித்துள்ளார். தமிழ்த்தாள் வாழ்த்துக்கு நான் அவமரியாதை இழைத்ததாக பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

ஒவ்வொரு விழாவிலும் தமிழ்த்தாய் வாழ்த்தை முழுமையாக பாடுவேன் என்பது அவருக்கு தெரியும்.

சமீபத்தில் கூட வடகிழக்கு மாநிலத்தில் அசாம் அரசின் ஒத்துழைப்புடன் கவுகாத்தி பல்கலைக்கழகத்தில் தமிழ் பட்டய படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது.

ஒரு ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் இனவாத கருத்தை தவறான குற்றச்சாட்டுகளுடன் முன்வைப்பது துரதிருஷ்டவசமாக மலிவானது. முதலமைச்சரின் உயர் அரசியலமைப்புப் பதவியின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையிலும் உள்ளது.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News