தமிழ்நாடு (Tamil Nadu)

பொங்கல் பரிசு தொகுப்பு - அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

Published On 2024-01-09 16:16 GMT   |   Update On 2024-01-09 16:16 GMT
  • பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ. 1000 வழங்கப்படுகிறது.
  • அரசுக்கு ரூ. 2 ஆயிரத்து 436 கோடி செலவினம்.

பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதாக அறிவித்து இருந்தது. அதன்படி 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 1 முழு கரும்பு மற்றும் ரூ. 1000 ரொக்கம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்து இருந்தது.

இந்த நிலையில், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தால் அரசுக்கு ரூ. 2 ஆயிரத்து 436 கோடி செலவினம். அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் முகாம்களில் வசிப்பவர்கள் என 2,19,71,113 குடும்ம்பத்தினர் பயனடைவர். 

Tags:    

Similar News