திருச்சி அருகே ஜல்லிக்கட்டு வீரர் திடீர் தற்கொலை
- சதீஷ்குமாருக்கு மாடு முட்டியதில் வயிற்றின் உள்பாகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது.
- ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க முடியாத விரக்தியில் தற்கொலை செய்து கொண்டார்.
திருச்சி:
திருச்சி மாவட்டம் லால்குடி தாளக்குடி கீரமங்கலம் கிழக்குத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் சதீஷ்குமார் (வயது 27). இவர் கடந்த ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொண்டார். அப்போது அவரை மாடு முட்டியது. இதில் அவரது வயிற்றின் உள்பாகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதற்கு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். இருந்தபோதிலும் பூரண நலம் பெற முடியவில்லை. மேலும் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க முடியாத நிலையும் ஏற்பட்டது.
இதனால் வாழ்க்கையில் மிகவும் விரக்தி அடைந்த சதீஷ்குமார் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தாயின் சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி முருகேசன் துறையூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் உடலை மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஜல்லிக்கட்டு வீரர் தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.