என் மலர்
நீங்கள் தேடியது "youth suicide"
- பாவூர்சத்திரம் செங்குந்தர் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் முருகேசன்
- கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அவரது மனைவி தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார்
நெல்லை:
பாவூர்சத்திரம் செங்குந்தர் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் ஜெகநாதன்(வயது 35). ஜவுளி வியாபாரி. இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.
குடும்பம் நடத்த மறுப்பு
கடந்த 20 நாட்களுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அவரது மனைவி தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் மனைவியை குடும்பம் நடத்த அழைத்து வர நேற்று முன்தினம் ஜெகநாதன் சென்றுள்ளார்.
ஆனால் அவர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த ஜெகநாதன் தனது வீட்டுக்கு வந்து தூங்க செல்வதாக கூறிவிட்டு அறைக்குள் சென்றுவிட்டார். நேற்று காலை வெகுநேரமாகியும் அவர் எழும்பாததால் சந்தேகம் அடைந்த முருகேசன் உள்ளே சென்று பார்த்துள்ளார்.
தற்கொலை
அங்கு ஜெகநாதன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் பிணமாக தொங்கினார். தகவல் அறிந்த பாவூர்சத்திரம் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். ஜெகநாதன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அவரது அறையில் ஒரு கடிதம் இருந்தது. அதனை போலீசார் எடுத்து சென்றுள்ளனர். அதில் சாவுக்கு காரணமானவர் குறித்த பெயர் விபரங்கள் இருந்ததாகவும், அதன் அடிப்படையில் விசாரைணை நடத்தப்பட்டு வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மன்னார்குடி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சுரேசை தேடி வந்தனர்.
- போலீசுக்கு பயந்த அவர் தூத்துக்குடிக்கு வந்தார். நேற்று இரவு அங்குள்ள தனியார் விடுதியில் தங்கிய அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி:
திருவாரூர் மாவட்டம் மூவநல்லூர் மேற்கு தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது25). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்ததாக புகார் எழுந்தது.
அதன்பேரில் மன்னார்குடி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சுரேசை தேடி வந்தனர்.
இந்நிலையில் போலீசுக்கு பயந்த அவர் தூத்துக்குடிக்கு வந்தார். நேற்று இரவு அங்குள்ள தனியார் விடுதியில் தங்கிய அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்ததும் புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி மற்றும் போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பாண்டிச்செல்வம் ஆலங்குடி அருகே உள்ள டி.களபம் ஊராட்சி ஓமங்கொல்லைப்பட்டி கிராமத்தில் தாய் மாமன் கருப்பையா மகன் துரை என்பவரின் வீட்டில் வசித்து வந்தார்.
- விவசாயம் செய்தும் வந்த அவர் அதே கிராமத்தில் வீட்டின் அருகே உள்ள பெண்ணுடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது.
புதுக்கோட்டை:
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தாலுகா ஜெயங்கொண்டாம் ஊராட்சியை சேர்ந்தவர் பாண்டிச்செல்வம் (வயது 23). இவர் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள டி.களபம் ஊராட்சி ஓமங்கொல்லைப்பட்டி கிராமத்தில் 2 வயது முதல் தனது தாய் மாமன் கருப்பையா மகன் துரை என்பவரின் வீட்டில் வசித்து வந்தார். ஐ.டி.ஐ. முடித்து விட்டு அவரது வீட்டில் தங்கியிருந்தார்.
இந்நிலையில் ஆடு, மாடுகள் மேய்த்தும், விவசாயம் செய்தும் வந்த அவர் அதே கிராமத்தில் வீட்டின் அருகே உள்ள பெண்ணுடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது. இவர்களுக்குள் ஏற்பட்ட மன வருத்தத்தில் அதே கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் ஏணியில் ஏறி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இந்நிலையில் இறந்தவரின் தந்தை ஆலங்குடி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் விரைந்து சென்ற போலீசார் உடலை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து ஆலங்குடி போலீஸ் அழகம்மை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
- செல்வம்அங்குள்ள ஒருவரது தோட்டத்தில் குடிசை அமைத்து குடும்பத்துடன் வசித்து வந்தார்
- கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு மனைவி கோபித்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகே உள்ள கூத்தனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம் ( வயது 38). விவசாய கூலி தொழிலாளியான இவர் அங்குள்ள ஒருவரது தோட்டத்தில் குடிசை அமைத்து குடும்பத்துடன் வசித்து வந்தார்.இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு மனைவி கோபித்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.
மீண்டும் குடும்பம் நடத்த அழைத்த பின்னரும் அவர் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த செல்வம் சறுக்கு பாறை பாலம் அருகே விஷம் குடித்து இறந்து கிடந்தார். அக்கம் பக்கத்து தோட்டக்காரர்கள் இன்று பாடாலூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மணக்கோலத்தில் பார்க்க வேண்டிய மகனை பிணக்கோலத்தில் பார்த்த பெற்றோர் கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைத்தது.
- வாலிபர் தற்கொலை குறித்து ஜம்புநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி:
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள பொன்னுசங்கம்பட்டி கிராமம் முத்துராஜா தெரு பகுதியை சேர்ந்தவர் வீரபத்திரன். இவரது மகன் சசிகுமார் (வயது 30). இவர் கேட்டரிங் படிப்பு முடித்துவிட்டு அமெரிக்காவில் பணியாற்றி வந்தார்.
திருமண வயதை எட்டிய சசிகுமாருக்கு பெற்றோர் பெண் பார்த்து வந்தனர். இந்த நிலையில் திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்துடன் அவர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்திருந்தார்.
பின்னர் பெற்றோர் அவருடன் சென்று பல்வேறு இடங்களில் பெண் பார்த்து வந்தனர். ஆனால் எதுவும் உறுதி செய்யப்படவில்லை. தொடர்ந்து முடிவாகாமல் இழுபறியே நீடித்து வந்தது.
திருமணம் முடித்து இல்லற வாழ்க்கையை தொடங்க வேண்டும் என்ற கனவுகளுடன் வந்த சசிகுமாருக்கு தொடர்ந்து ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் சசிகுமார் மிகுந்த மன வேதனைக்கு ஆளானார்.
இதற்கிடையே வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். உறவினர்கள் அவரை மீட்டு திருச்சியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இருந்தபோதிலும் அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்து போனார்.
மணக்கோலத்தில் பார்க்க வேண்டிய மகனை பிணக்கோலத்தில் பார்த்த பெற்றோர் கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைத்தது. இந்த சம்பவம் குறித்து ஜம்புநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ராஜி, கடந்த ஒருவாரமாக தனது நண்பர்களிடம் தாயின் நினைவாக இருக்கிறது என்று கூறி வந்தார்.
- நள்ளிரவில் ராஜி திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்டு வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ராயபுரம்:
தண்டையார்பேட்டை மார்க்கெட் பகுதியில் வசித்து வந்தவர் ராஜி. பூக்கடை பகுதியில் தள்ளுவண்டி வைத்து சிற்றுண்டி கடை நடத்தி வந்தார்.
இவரது தாய் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். தாய் மீது அதிக அன்பு வைத்திருந்த ராஜியால் இந்த பிரிவை தாங்கிக்கொள்ள முடியவில்லை. எப்போதும் தாயின் நினைவாக இருந்தார். அவருக்கு நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆறுதல் கூறி வந்தனர்.
இந்த நிலையில் ராஜி, கடந்த ஒருவாரமாக தனது நண்பர்களிடம் தாயின் நினைவாக இருக்கிறது என்று கூறி வந்தார். இதற்கிடையே நள்ளிரவில் அவர் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்டு வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ராஜி தற்கொலை செய்வதற்கு முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு செய்து இருந்தார். அதில் அம்மா... உன்னுடன் இருந்த உறவை மறப்பது கடினம் அம்மா... என்று குறிப்பிட்டு உள்ளார்.
தாய் இறந்த சோகத்தால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக 12ஆண்டுகள் கழித்து மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- மனஉலைச்சலுக்கு ஆளான ராஜா தூக்கு மாட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
- திருவண்ணாமலை ரோட்டில் நேற்று நள்ளிரவில் சாலை மறியல் செய்தனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே சூரப்பட்டு கிராமத்தில் வசிப்பவர் மூர்த்தி (வயது 47). இவர் கடந்த 20-ந் தேதி இரவு வீட்டில் உறங்கி கொண்டிருந்த போது பெட்ரோல் வாசனை அடித்தது. வெளியில் வந்து பார்த்தபோது தனது மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் பெட்ரோல் திருடிக் ெகாண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அதில் ஒருவனை பிடித்தபோது அதே ஊரைச் சேர்ந்த மரியநாதன் என்பவர் மகன் ராஜா என்பது தெரிந்தது.
இது குறித்து கெடார் போலீஸ் நிலையத்தில் மூர்த்தி புகார் அளித்தார். அப்போது அங்கு வந்த மரியநாதன், தனது மகன் ராஜாவை மூர்த்தி தாக்கிவிட்டு ஜாதியை சொல்லி திட்டியதாகவும் புகார் அளித்தார். புகாரினை பெற்ற போலீசார் மூர்த்தி மற்றும் ராஜா மீது தனித்தனியே வழக்கு பதிவு செய்தனர்.
இதையடுத்து கடும் மனஉலைச்சலுக்கு ஆளான ராஜா என்பவர் நேற்று இரவு அவரது ஓட்டு வீட்டில் தூக்கு மாட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த கெடார் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்ய அனுப்பி வைக்க சூரப்பட்டு கிராமத்திற்கு வந்தனர்.
அப்போது ராஜாவின் உறவினர்கள் ராஜா தற்கொலை செய்துகொள்ள வெங்கந்தூர் கிராமத்தை சேர்ந்த பா.ம.க. பிரமுகர் வெங்கடேசன், மூர்த்தி ஆகியோர் தான் காரணம். எனவே, அவர்களை கைது செய்ய வேண்டுமென விழுப்புரம்-திருவண்ணாமலை ரோட்டில் நேற்று நள்ளிரவில் சாலை மறியல் செய்தனர். தகவலறிந்து விரைந்து வந்த விழுப்புரம் போலீஸ் சுப்பிரண்டு ஸ்ரீநாதா மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி போலீஸ் நிலையம் வந்து புகார் மனு கொடுக்க அறிவுறு த்தினார். இதையடுத்து சாலை மறியலை ராஜாவின் உறவினர்கள் கைவிட்டனர். ராஜாவின் உடலை கைப்பற்றிய கெடார் போலீசார் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அக்கிராமத்தில் அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- ஒருதலையாக காதலித்த பள்ளி மாணவியை தன்னை காதலிக்குமாறு கட்டாயப்படுத்தி பொது இடத்தில் அடித்த வாலிபர் போலீசாரின் விசாரணைக்கு பயந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- போலீசாரின் விசாரணைக்கு பயந்து வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த எல்லப்பன்பட்டியை சேர்ந்தவர் மணி (வயது 21) டிராக்டர் டிரைவர். ஒடுகத்தூர் அருகே உள்ள மலைகிராமத்தை சேர்ந்த 15 வயது 10-ம் வகுப்பு பள்ளி மாணவியை ஒருதலையாக காதலித்து வந்தார்.
நேற்று மாதனூர் பகுதியில் இருக்கும் பள்ளிக்கு மாணவி பஸ்சில் சென்றார். அப்போது பஸ்சில் ஏறி சென்ற மணி தன்னை காதலிக்குமாறு மாணவியிடம் கட்டாயப்படுத்தியுள்ளார். மாணவி மறுப்பு தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த அவர் மாணவியை கட்டாயப்படுத்தி பஸ்சில் இருந்து கீழே இறக்கி அடித்துள்ளார்.
இதனால் பள்ளிக்கு மாணவி காலதாமதமாக சென்றார். ஆசிரியர் தாமதம் குறித்து கேட்டபோது நடந்ததை மாணவி கூறினார். இதுகுறித்து உடனடியாக பெற்றோருக்கு ஆசிரியர்கள் தகவல் தெரிவித்தனர்.
இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் வேப்பங்குப்பம் போலீசார் மணியை விசாரிக்க வீட்டிற்கு சென்றனர். வீட்டில் மணி இல்லாததால் அவரின் அம்மாவிடம் கூறிவிட்டு வந்துள்ளனர்.
போலீசார் வீட்டிற்கு வந்த தகவல் மணிக்கு செல்லவே விசாரணைக்கு பயந்து மணி பள்ளிகொண்டா அடுத்த பள்ளிகுப்பத்தில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்றார். அங்கு தனது பாட்டியிடம் போலீசார் வந்தால் நான் இங்கு இருப்பதாக சொல்லாதே என கூறிவிட்டு நிலத்திற்கு செல்கின்றேன் என கூறி சென்றார். இந்த நிலையில் போலீசாரின் விசாரணைக்கு பயந்த மணி நிலத்தில் இருந்த வேப்பமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்து வந்த பள்ளிகொண்டா போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசாரின் விசாரணைக்கு பயந்து வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஸ்கேன் சென்டர் முன்பு ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- தற்போது பழனி அரசு ஆஸ்பத்திரி வளாகத்திலும் அதே போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பழனி:
பழனி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள மரத்தில் இன்று காலை தூக்கு மாட்டிய நிலையில் ஒரு வாலிபர் இறந்து கிடந்தார். ஆஸ்பத்திரி ஊழியர்கள் இதை பார்த்து அதிர்ச்சியடைந்து பழனி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை கைப்பற்றினர். அவர் பாக்கெட்டில் இருந்த ஒரு செல்போனில் கடைசியாக பேசிய எண்ணில் தொடர்பு கொண்டு பேசினர்.
அப்போது இறந்தவர் கோவை சரவணம்பட்டி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சரவணபாரதி (வயது 37) என தெரியவந்தது. இவர் எதற்காக பழனிக்கு வந்தார்? எங்கே வேலை பார்த்தார்? அரசு ஆஸ்பத்திரியில் யாரை பார்க்க வந்தார்? என போலீசார் விசாரித்து வருகின்றனர். திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஸ்கேன் சென்டர் முன்பு ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்போது பழனி அரசு ஆஸ்பத்திரி வளாகத்திலும் அதே போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- சதீஷ்குமாருக்கு மாடு முட்டியதில் வயிற்றின் உள்பாகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது.
- ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க முடியாத விரக்தியில் தற்கொலை செய்து கொண்டார்.
திருச்சி:
திருச்சி மாவட்டம் லால்குடி தாளக்குடி கீரமங்கலம் கிழக்குத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் சதீஷ்குமார் (வயது 27). இவர் கடந்த ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொண்டார். அப்போது அவரை மாடு முட்டியது. இதில் அவரது வயிற்றின் உள்பாகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதற்கு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். இருந்தபோதிலும் பூரண நலம் பெற முடியவில்லை. மேலும் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க முடியாத நிலையும் ஏற்பட்டது.
இதனால் வாழ்க்கையில் மிகவும் விரக்தி அடைந்த சதீஷ்குமார் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தாயின் சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி முருகேசன் துறையூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் உடலை மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஜல்லிக்கட்டு வீரர் தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பெண்ணுடன் ஆபாசமாக இருப்பதுபோல் மார்பிங் வீடியோவை மனைவிக்கு அனுப்பியதால் ராஜேஷ் தற்கொலை செய்து கொண்டார்.
- ராஜேஷ் போட்டோவை மார்பிங் செய்து அவரது மனைவிக்கு அனுப்பியது யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், என்.டி.ஆர் மாவட்டம், இப்ராகிம் பட்டணம் மண்டலம், சுராய பலேனியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 35). இவர் இங்கிலாந்து பிரிட்ஜ் கோர்ஸ் நிறுவனத்தில் ஆலோசகராக வேலை செய்து வந்தார். ஆன்லைன் மூலம் இவர் லோன் ஆப்பில் கடன் வாங்கியுள்ளார்.
வாங்கிய கடனை மொத்தமாக திருப்பி செலுத்தி உள்ளார். இருப்பினும் மேலும் ரூ 10 ஆயிரம் கட்ட வேண்டும் என லோன் ஆப் நிறுவனத்தினர் ராஜேஷுக்கு நெருக்கடி கொடுத்தனர்.
இதனால் லோன் ஆப் நிறுவனத்தினர் போன் செய்தபோது போனை எடுக்காமல் இருந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த லோன் ஆப் நிறுவனத்தினர் ராஜேஷ் வேறு ஒரு பெண்ணுடன் ஆபாசமாக இருப்பது போலவும் ஆபாசமான பெண்ணிடம் வீடியோ காலில் பேசுவது போலவும் போட்டோ, வீடியோவை மார்பிங் செய்து அவரது மனைவி ரத்தினகுமாரிக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பி வைத்தனர்.
இதனை கண்ட ரத்தினகுமாரி, ராஜேஷிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது ராஜேஷ் லோன் ஆப் நிறுவனத்தில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் அவர்கள் இதுபோன்று போட்டோ வீடியோவை மாப்பிங் செய்து அனுப்பியதாக மனைவியிடம் தெரிவித்தார்.
லோன் ஆப் மூலம் வாங்கிய கடனை அந்த பெண்ணுக்கு தான் செலவு செய்தாயா? வேறு எதற்காக கடன் வாங்கினாய் என சண்டையிட்டார். மேலும் ரத்தினகுமாரி ராஜேஷிடம் கோபித்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இதனால் விரக்தி அடைந்த ராஜேஷ் நேற்று காலை நான் தற்கொலை செய்து கொள்ள போகிறேன் என மனைவிக்கு செல்போனில் மெசேஜ் அனுப்பி விட்டு வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கணவர் அனுப்பிய மெசேஜை பார்த்த ரத்தினகுமாரி அதிர்ச்சி அடைந்து அவருக்கு பலமுறை போன் செய்தார். ராஜேஷ் போனை எடுக்காததால் சந்தேகம் அடைந்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது ராஜேஷ் தூக்கில் பிணமாக தொங்கினார்.
இதை கண்டு அவர் கதறி துடித்தார். இதுகுறித்து தகவல் அறிந்த இப்ராகிம் பட்டிணம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ராஜேஷ் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜேஷ் போட்டோவை மார்பிங் செய்து அவரது மனைவிக்கு அனுப்பியது யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போலீசார் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்ததால் மனவேதனையில் இருந்த நிசாந்த் திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- நிசாந்த் கடந்த 6 மாதத்துக்கு முன்பு தான் மனைவி அப்ரினை காதலித்து திருமணம் செய்து உள்ளார்.
போரூர்:
சென்னை, எம்.ஜி.ஆர். நகர், கன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த். இவரது மகன் நிசாந்த் (வயது24). தேனாம்பேட்டையில் உள்ள தி.மு.க. இளைஞரணி அலுவலகமான அன்பகத்தில் வேலை பார்த்து வந்தார்.
நேற்று இரவு நிசாந்த், கே.கே. நகர் பகுதியில் நண்பர்களுடன் குடித்ததாக தெரிகிறது. பின்னர் அவர், தனது மோட்டார் சைக்கிளில் ஜாபர்கான்பேட்டை காசி தியேட்டர் வழியாக வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த எம்.ஜி.ஆர் நகர் போலீஸ் நிலைய ஏட்டு பார்த்திபன் மற்றும் போலீஸ்காரர் கார்த்திக் ஆகியோர் நிசாந்த்தை நிறுத்தி விசாரித்தனர்.
அப்போது அவர் மதுபோதையில் மோட்டார் சைக்கிள் ஓட்டிவந்தது தெரிந்தது. இதையடுத்து மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக நிசாந்த் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் அபராத தொகையை செலுத்திவிட்டு மோட்டார் சைக்கிளை பெற்றுக்கொள்ளும்படி கூறி வண்டியை பறிமுதல் செய்தனர்.
இதைத்தொடர்ந்து நிசாந்த் அங்கிருந்து வீட்டுக்கு சென்றுவிட்டார். நள்ளிரவு வீட்டுக்கு வந்த நிசாந்த் மோட்டார் சைக்கிளை போலீசார் பறித்து கொண்டதாகவும் காலையில் சென்று அபராத தொகை செலுத்த வேண்டும் என்று மனைவி அப்ரினிடம் கூறி புலம்பினார். மிகவும் மனவேதனையில் இருந்த அவருக்கு மனைவி ஆறுதல் கூறிவிட்டு தூங்கிவிட்டார்.
இந்த நிலையில் போலீசார் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்ததால் மனவேதனையில் இருந்த நிசாந்த் திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதிகாலையில் அப்ரின் எழுந்து பார்த்த போது கணவர் நிசாந்த் தற்கொலை செய்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி துடித்தார். இதுகுறித்து எம்.ஜி.ஆர் நகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து நிசாந்த் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். நிசாந்த் கடந்த 6 மாதத்துக்கு முன்பு தான் மனைவி அப்ரினை காதலித்து திருமணம் செய்து உள்ளார். இந்த நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தினர் மற்றும் உறவினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.