தமிழ்நாடு (Tamil Nadu)

3 நாட்களுக்கு பிறகு கடலுக்கு மீன்பிடிக்க சென்ற வேதாரண்யம் மீனவர்கள்

Published On 2024-10-17 05:18 GMT   |   Update On 2024-10-17 05:18 GMT
  • நாகை துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருந்தது.
  • குறைந்த அளவிலான மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

வேதாரண்யம்:

மிககனமழை எச்சரிக்கை காரணமாக நாகை மீன் வளத்துறை மூலம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறையினர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இதனை அடுத்து வேதாரண்யம் தாலுக்காவை சேர்ந்த 5000 மீனவர்கள் தங்களது பைபர்படகுகளை கடற்கரையோரம் பாதுகாப்பாக நிறுத்திவிட்டு மீன் பிடிக்க செல்லாமல் இருந்தனர்.

மழை இல்லாததாலும், வானிலை சீராக உள்ளதாலும் இன்று முதல் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லலாம் என மீன்வளத்துறை அனுமதி அளித்துள்ளது. இதைத் தொடர்ந்து மீன்வளத்துறை அனுமதி அளித்ததால் 3 நாட்களுக்கு பிறகு இன்று மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

தென் வங்ககடலின் மத்திய பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதை தொடர்ந்து நாகை துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருந்தது.

மேலும் வானிலை மையம் அறிவிப்பை தொடர்ந்து நாகை மாவட்ட பைபர் மற்றும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் இருந்தனர்.

இந்நிலையில் வங்ககடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை புதுச்சேரி நெல்லூருக்கு இடையே கரையை கடந்ததை தொடர்ந்து நாகை மாவட்டத்தில் குறைந்த அளவிலான மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

Tags:    

Similar News