தமிழ்நாடு (Tamil Nadu)

டாஸ்மாக் வேண்டும் என பெண்கள் போராடிய விவகாரம்- திடீர் திருப்பம்

Published On 2024-08-13 06:56 GMT   |   Update On 2024-08-13 06:56 GMT
  • ஆதனூர் பகுதியில் டாஸ்மாக்‌ மதுக்கடை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மனு அளித்தனர்.
  • எந்த போராட்டத்திற்கு செல்கிறோம் என தெரியாமல் சென்றோம்.

தர்மபுரி:

தர்மபுரி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சாந்தி தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் பென்னாகரம் அருகே உள்ள ஆதனூர் உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு வந்து ஆதனூர் பகுதியில் 'டாஸ்மாக்' மதுக்கடை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மனு அளித்தனர்.

பொதுவாக மதுக்கடை வேண்டாம், இருக்கும் மதுக்கடையை வேறு பகுதிக்கு மாற்றக்கோரியும் தான் கலெக்டர் அலுவலகத்தில் மனுக்கள் கொடுக்கப்பட்டு வருகிறது.

தற்போது மதுக்கடை வேண்டும் என பெண்கள் உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் திரண்டு வந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்த சம்பவம் வினோதத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தர்மபுரியில் டாஸ்மாக் வேண்டும் என பெண்கள் போராடிய விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக போராட்டம் நடத்திய பெண்கள் கூறுகையில்,

எந்த போராட்டத்திற்கு செல்கிறோம் என தெரியாமல் சென்றோம். தலைக்கு ரூ.300 கொடுத்து போராட்டத்திற்கு அழைத்து சென்றனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்ற பின்னரே போராட்டம் குறித்து தெரிந்தது. போராட்டத்திற்கு அழைத்து சென்றவர்கள் கூறியதை பேட்டியில் கூறினோம் என்று தெரிவித்தனர்.

Tags:    

Similar News