தமிழ்நாடு

விநாயகர் சதுர்த்தி- தமிழகம் முழுவதும் 64,217 போலீசார் பாதுகாப்பு

Published On 2024-09-06 15:55 GMT   |   Update On 2024-09-06 15:55 GMT
  • சிலைகள் கரைப்பு, ஊர்வலங்கள், சிசிடிவி கேமராக்கள் மற்றும் ட்ரோன்கள் மூலம் கண்காணிக்கப்படும்.
  • பிரச்சினைகள் எதுவும் ஏற்பட்டால் உடனடியாக காவல்துறை தலைமை அலுவலகத்திற்கு தெரியும் வகையில் ஏற்பாடு.

விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 64,217 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என டிஜிபி சங்கர் ஜிவால் அறிவித்துள்ளார்.

மேலும், இதுகுறித்து கூறிய டிஜிபி சங்கர் ஜிவால், " சிலைகள் கரைப்பு, ஊர்வலங்கள், சிசிடிவி கேமராக்கள் மற்றும் ட்ரோன்கள் மூலம் கண்காணிக்கப்படும்.

பிரச்சினைகள் எதுவும் ஏற்பட்டால் உடனடியாக காவல்துறை தலைமை அலுவலகத்திற்கு தெரியும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தி விழாவை அமைதியான முறையில் கொண்டாட தமிழக காவல்துறை சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

விநாயகர் சதுர்த்தி விழா சுமூகமாக நடைபெறுவதற்கு விழா ஒருங்கிணைப்பாளர்களும், பொது மக்களும் காவல் துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News