தமிழ்நாடு (Tamil Nadu)

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு- தேடப்பட்டு வந்த முக்கிய நபரான புதூர் அப்பு கைது

Published On 2024-09-21 14:59 GMT   |   Update On 2024-09-21 14:59 GMT
  • ரவுடி புதூர் அப்புவை டெல்லியில் வைத்து தனிப்படை போலீசார் மடக்கிப் பிடித்துள்ளனர்.
  • ஏற்கனவே 27 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் ஒருவர் கைது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய நபரான ரவுடி புதூர் அப்பு கைது செய்யப்பட்டுள்ளார்.

ரவுடி புதூர் அப்புவை டெல்லியில் வைத்து தனிப்படை போலீசார் மடக்கிப் பிடித்துள்ளனர்.

ஆம்ஸ்ட்ராங்கை கொல்ல நாட்டு வெடிகுண்டுகளை சப்ளை செய்ததாக ரவுடி புதூர் அப்பு மீது குற்றச்சாட்டு எழுந்தது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏற்கனவே 27 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Tags:    

Similar News