தமிழ்நாடு

நாங்கள் படிக்க சொல்கிறோம், ஆட்சியாளர்கள் குடிக்க சொல்கின்றனர்- ராமதாஸ்

Published On 2024-07-03 04:14 GMT   |   Update On 2024-07-03 04:14 GMT
  • பிள்ளைகள், பேரன், பேத்திகள், படித்து கலெக்டராக டாக்டராக வேண்டும் என நானும், அன்புமணியும் கூறுகிறோம்.
  • தமிழ்நாட்டில் இன்று பிள்ளைகளுக்கு சாராயத்துடன் கஞ்சாவை கொடுத்து கெடுத்து விடுகிறார்கள்.

விக்கிரவாண்டி:

விக்கிரவாண்டி தொகுதியில் சிந்தாமணி, உலகலாம் பூண்டி ஆகிய இடங்களில், பா.ம.க., வேட்பாளர் சி.அன்புமணிக்கு ஆதரவாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

கடந்த 45 ஆண்டு காலமாக இட ஒதுக்கீடு கேட்டு போராடி வந்து கொண்டிருக்கிறேன். 10 முறை சிறைச்சாலைகளுக்கு சென்று வந்துள்ளேன்.

பிள்ளைகள், பேரன், பேத்திகள், படித்து கலெக்டராக டாக்டராக வேண்டும் என நானும், அன்புமணியும் கூறுகிறோம். நாங்கள் படியுங்கள் என்று கூறினால் ஆட்சியாளர்கள் பணத்தை வாங்கிக்கொண்டு குடியுங்கள் என்று கூறுகிறார்கள்.

சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க கூறினால் மத்திய அரசு தான் செய்யனும் என்கிறார்கள் திமுகவினர். பெண்கள் விழிப்பாக உள்ளனர். நீங்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம். அரசாங்கத்தை மாற்ற முடியும். கொள்ளையர்களை விரட்ட முடியும்.

தமிழ்நாட்டில் இன்று பிள்ளைகளுக்கு சாராயத்துடன் கஞ்சாவை கொடுத்து கெடுத்து விடுகிறார்கள். சாதி வாரி கணக்கெடுப்பதால் வன்னியர்கள் அதிகமாக இருக்கிறார்கள் என தெரிந்துவிடும் நான் வன்னியர்களுக்காக மட்டும் கேட்கவில்லை. அனைத்து சமுதாயத்திற்கும் தான் நான் இட ஒதுக்கீடு கேட்டு போராடி சிறை சென்று வந்துள்ளேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News