தமிழ்நாடு (Tamil Nadu)

மாணவச் செல்வங்கள் வெற்றிகளைக் குவிக்க வாழ்த்துகிறேன்- உதயநிதி ஸ்டாலின்

Published On 2024-06-10 10:25 GMT   |   Update On 2024-06-10 10:25 GMT
  • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில் வாழ்த்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
  • கோடை விடுமுறை முடிந்து மாணவர்கள் பள்ளி திரும்பும் நாள் இன்று.

கோடை விடுமுறை முடிந்து தமிழ்நாட்டில் இன்று (திங்கட்கிழமை) முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. முதல் நாளே பாட புத்தகங்கள் வழங்க பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.

இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில் வாழ்த்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது,

கோடை விடுமுறை முடிந்து மாணவர்கள் பள்ளி திரும்பும் நாள் இன்று. முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் கல்வியில் முதன்மை மாநிலமாக விளங்கும் தமிழ்நாட்டிற்கு வலுசேர்க்கும் விதத்தில், மாணவச்செல்வங்கள் கல்வியிலும் விளையாட்டு உள்ளிட்ட தனித்திறமைகளிலும் கவனம் செலுத்தி வெற்றிகளைக் குவிக்க வாழ்த்துகிறேன்.

மாணவச்செல்வங்களுக்கு பெற்றோர்களும் ஆசிரியப் பெருமக்களும் உறுதுணையாய் இருந்து கற்றல் சூழலை எளிதாக்கவும் இனிதாக்கவும் வேண்டுகிறேன். என்று கூறியுள்ளார்.

Tags:    

Similar News