தமிழ்நாடு

70 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்ய முயன்ற தொழிலாளிக்கு 1 ஆண்டு சிறை

Published On 2023-07-22 03:38 GMT   |   Update On 2023-07-22 03:38 GMT
  • கடந்த 2018-ம் ஆண்டு இரவு மூதாட்டி தனது வீட்டில் தனியாக இருந்தார்.
  • குற்றம்சாட்டப்பட்ட தங்கராஜிக்கு 1 ஆண்டு சிறையும், ரூ. 12 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

கொல்லிமலை:

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள பேளுக்குறிச்சியை சேர்ந்த 70 வயது மூதாட்டி தனியாக வசித்து வந்தார். இவரது தோட்டத்துக்கு அதே பகுதியை சேர்ந்த தங்கராஜ் (37) என்பவர் தொழிலாளியாக வேலைக்கு சென்று வந்தார்.

இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு இரவு மூதாட்டி தனது வீட்டில் தனியாக இருந்தார். அப்போது குடிபோதையில் அங்கு வந்த தங்கராஜ், மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.

இதையடுத்து அவரிடம் இருந்து தப்பித்து மூதாட்டி வீட்டிற்குள் சென்று விட்டார். இதுகுறித்து மூதாட்டி பேளுக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கராஜை கைது செய்தனர்.

மேலும் இது தொடர்பான வழக்கு சேந்தமங்கலம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கில் நீதிபதி ஹரிஹரன் தீர்ப்பு கூறினார். அதில் குற்றம்சாட்டப்பட்ட தங்கராஜிக்கு 1 ஆண்டு சிறையும், ரூ. 12 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

Tags:    

Similar News