தமிழ்நாடு

சென்னையில் 2 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

Published On 2024-10-28 10:41 GMT   |   Update On 2024-10-28 10:41 GMT
  • பள்ளிகளுக்கு இ மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
  • வெடிகுண்டு மிரட்டல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாடு முழுவதும் சமீப காலமாக வெடிகுண்டு மிரட்டல் சம்பவமங்கள் அதிகரித்து வருகுிறது. குறிப்பாக, விமானங்கள், பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில், சென்னை குரோம்பேட்டை அருகே உள்ள 2 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

அஸ்தினாபுரம் அருகே உள்ள என்.எஸ்.என் மற்றும் ரோசரி ஆகிய பள்ளிகளுக்கு இ மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் பள்ளிகளுக்கு விரைந்த பெற்றோர் குழந்தைகளை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.

மாணவர்கள் அனைவரும் வெளியே அனுப்பிய நிலையில், வெடிகுண்டு சோதனை நிபுணர்கள் பள்ளியை ஆய்வு செய்து வருகிறது.

வெடிகுண்டு மிரட்டல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News