தமிழ்நாடு (Tamil Nadu)

தி.நகரில் கூட்ட நெரிசல்- வாகனங்களை இங்கே நிறுத்த பொது மக்களுக்கு அனுமதி

Published On 2024-10-25 11:00 GMT   |   Update On 2024-10-25 11:00 GMT
  • உஸ்மான் சாலை மேம்பாலம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மூடப்பட்டது.
  • பாலத்தில் 80 கார்கள், 1000 பைக்குகள் வரை நிறுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஓ

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தி.நகர் உள்ளிட்ட கடை வீதிகளில் விற்பனை படுஜோராக உள்ளது.

வழக்கம்போல தி.நகரில் தினமும் மக்கள் குவிந்து வருகின்றனர். இதனால், கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.

வாகனங்களில் வரும் மக்கள், வாகனங்களை பல கிலோ மீட்டருக்கு வெளியேவிட்டு நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பொது மக்களுக்கு வசதியாகவும், தீபாவளி கூட்ட நெரிசலையொட்டியும் பல மாதங்களாக மூடப்பட்டுள்ள உஸ்மான் சாலை மேம்பாலத்தில் வாகனங்களை நிறுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.

உஸ்மான் சாலை மேம்பாலம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மூடப்பட்டது. இந்த பாலத்தில் 80 கார்கள், 1000 பைக்குகள் வரை நிறுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News