தமிழ்நாடு (Tamil Nadu)

நா பாஜக B டீமா?.. மக்களை ஏமாற்றும் திராவிட மாடல் ஆட்சி- திமுகவை சீண்டும் விஜய்

Published On 2024-10-27 13:38 GMT   |   Update On 2024-10-27 13:38 GMT
  • மக்கள் விரோத ஆட்சியை திராவிட மாடல் ஆட்சினு சொல்லி மக்களை ஏமாத்துறிங்க.
  • பிளவுவாத அரசியல் செய்றவங்க தான் எங்கள் கட்சியில் முழுமுதல் கொள்கை எதிரி.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு பிரம்மாண்டமாக இன்று மாலை 4 மணியளவில் தொடங்கியது. தவெக மாநாடு நடைபெறும் திடலுக்கு விஜய் வருகை தந்தார். அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதனையடுத்து மக்களிடையே உரையாற்றிய விஜய், "நம் கொள்கைக்கு எதிராக மக்களை சாதி, மதம், பாலினம், இனம் , மொழி, ஏழை, பணக்காரன் என்று சூழ்ச்சி செய்து ஆளும் பிளவுவாத அரசியல் சிந்தாந்தம் தான் நமக்கு எதிரியா? அப்படியென்றால் நமக்கு ஒரு எதிரி மட்டும் தானா?

நமக்கு இன்னொரு கொள்கை இருக்கே. ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரத்தை எதிர்ப்பது தான் அது. ஊழல் என்பது வைரஸ் மாதிரி. பிளவுவாத சக்திகளை கூட நாம் எளிதாக கண்டுபிடித்து விடலாம். ஆனால் ஊழல் வாதிகளை கண்டுபிடிப்பது சிரமம்.

ஊழல் கபடதாரிகள் தான் நம்மை ஆட்சி செய்து வருகிறார்கள். நமது ஒரு எதிரி பிளவுவாத அரசியல். இன்னொரு எதிரி ஊழல் கபடதாரிகள். இங்கு யார் ஆட்சிக்கு வரவேண்டும் யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்று நமது மக்களுக்கு தெரியும்.

தமிழக மக்கள் மதத்தை கடந்து ஒன்றுசேருவார்கள். இங்கு சாதி இருக்கும். ஆனால் அது சைலண்டா தான் இருக்கும். சாதியை வைத்து அரசியல் செய்பவர்களை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

இங்க ஒரு கூட்டம் ரொம்ப நாளா ஒரே பாட்டை பாடிகிட்டு.. யாரு அரசியலுக்கு வந்தாலும் அவங்க மேல ஒரு சாயத்தை பூசிக்கிட்டு.. பூச்சாண்டி காட்டிகிட்டு... மக்களை ஏமாத்திகிட்டு.. அவங்களுக்கு எப்ப பாத்தாலும் பாசிசம் பாசிசம் பாசிசம் அவ்ளோ தான்.

ஒற்றுமையாக இருக்குற நம்ம மக்கள் மத்தியில சிறுபான்மை, பெருபான்மைனு பிரிவினை பயத்தை காட்டி புல்டைம் சீனு போடுறது

தெரியாம தான் கேக்குறேன் அவங்க பாசிசம்னா நீங்க என்ன பாயாசமா? நீங்களும் அவங்களுக்கு கொஞ்சம் கூட சளைக்காதவங்க தான்.

மக்கள் விரோத ஆட்சியை திராவிட மாடல் ஆட்சினு சொல்லி மக்களை ஏமாத்துறிங்க. இனிமே உங்களை எதிர்க்கறவங்களுக்கு அந்த கலரை பூசுறது இந்த கலரை பூசுறதுனு என்னதான் நீங்க மோடிமஸ்தான் வேலையை செஞ்சாலும் ஒன்னும் நடக்கபோறது இல்ல.

எங்க கட்சிக்கு நாங்க முடிவு பண்ணிருக்க கலரை விட வேற எந்த கலரையும் யாரும் பூச முடியாது. எங்க கோட்பாடே பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பது தான். இது யாருக்கு எதிரான கொள்கைனு நான் சொல்லியா உங்களுக்கு தெரியணும்.

இந்த நாட்டையே பாழ்ப்படுத்துற பிளவுவாத அரசியல் செய்றவங்க தான் எங்கள் கட்சியில் முழுமுதல் கொள்கை எதிரி. அடுத்து திராவிட மாடல்னு சொல்லிக்கிட்டு பெரியார், அண்ணா பேரை வைச்சி தமிழ்நாட்டை சுரண்டி கொள்ளையடிக்கிற குடும்ப சுயநல கூட்டம் தான் நம்மோட அடுத்த எதிரி" என்று பேசினார்.

Tags:    

Similar News