தமிழ்நாடு (Tamil Nadu)

எந்த சக்தியாலும் திமுகவை அசைக்க முடியாது- சேகர்பாபு

Published On 2024-10-28 05:14 GMT   |   Update On 2024-10-28 05:14 GMT
  • திமுக கூடி கலையும் மேகக்கூட்டங்கள் இல்லை கொள்கை கூட்டம்.
  • புயல், மழை, வெள்ளம் வந்தாலும் திமுகவை அசைத்துப்பார்க்க முடியாது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது. லட்சக்கணக்கான தொண்டர்கள் திரண்டிருந்த மாநாட்டில் பேசிய விஜய்,

இந்த நாட்டை பாழ்படுத்தும் பிளவுவாத அரசியல் செய்வோர்தான் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை ரீதியான முதல் எதிரி. திராவிட மாடல் ஆட்சி என்று பெரியார், அண்ணா பெயரை வைத்து தமிழ்நாட்டை சுரண்டி கொள்ளையடிக்கும் ஒரு குடும்ப சுயநலக்கூட்டம் தான் அடுத்த எதிரி,

அரசியல் எதிரி. கொள்கை, கோட்பாடு அளவில் தேசியத்தையும், திராவிடத்தையும் பிரித்துபார்க்க போவதில்லை. திராவிடமும், தமிழ் தேசியமும் இந்த மண்ணின் இரண்டு கண்கள். நாம் எந்த குறிப்பிட்ட அடையாளத்தின்கீழும் நம்மை சுருக்கி கொள்ளாமல், மதச்சார்பற்ற சமூக நீதிகொள்கைகளை, நமது கொள்கை அடையாளமாக முன்னிறுத்தி செயல்பட போகிறோம் என்று கூறினார்.

இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கூறுகையில்,

* திமுக கூடி கலையும் மேகக்கூட்டங்கள் இல்லை கொள்கை கூட்டம். எந்த சக்தியாலும் திமுகவை அசைத்து பார்க்க முடியாது.

* தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளவரை எந்த சக்தியாலும் திமுகவை அசைத்துக்கூட பார்க்க முடியாது.

* புயல், மழை, வெள்ளம் வந்தாலும் திமுகவை அசைத்துப்பார்க்க முடியாது என்று கூறினார்.

Tags:    

Similar News