தமிழ்நாடு (Tamil Nadu)

புதிய தண்டவாளம் அமைக்கும் பணி- ரெயில்கள் நாளை ரத்து

Published On 2024-10-26 13:27 GMT   |   Update On 2024-10-26 13:27 GMT
  • நாளை அதிகாலை 4 மணி முதல் மாலை 5 மணி வரை ரெயில் சேவையில் மாற்றம்.
  • எழும்பூர் ரெயில் நிலையத்திற்கு கூடுதலாக 6 பேருந்துகளை இயக்க ஏற்பாடு.

புதிய தண்டவாள் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால், சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு ரெயில்கள் நாளை ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை பூங்கா ரெயில் நிலையத்தில் இருந்து தாம்பரம் மற்றும் செங்கல்பட்டிற்கு ரெயில்கள் இயக்கப்படும் என்று தென்னக ரெயில்வே தெரிவித்துள்ளது.

மேலும், நாளை அதிகாலை 4 மணி முதல் மாலை 5 மணி வரை ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பயணகள் நலன் கருதி கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து எழும்பூர் ரெயில் நிலையத்திற்கு கூடுதலாக 6 பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News