தமிழ்நாடு (Tamil Nadu)

மதுரையில் 3 நாட்களுக்கு மதுக்கடைகள் மூடல்

Published On 2024-10-23 10:17 GMT   |   Update On 2024-10-23 10:17 GMT
  • மனமகிழ் மன்றங்கள், தனியார் பார் உள்ளிட்டவை 3 நாட்கள் மூடப்படுகிறது.
  • உத்தரவுகளை மீறுவோரை கண்காணிக்க அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மதுரை மாவட்டத்தில் 3 நாட்கள் மதுபான கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். மருதுபாண்டியர்களின் நினைவு தினம் மற்றும் தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு 3 நாட்கள் மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, வருகிற 27-ந்தேதி முதல் 30-ந்தி வரை 3 நாட்களுக்கு அனைத்து மதுபானக்கடைகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மனமகிழ் மன்றங்கள், தனியார் பார் உள்ளிட்டவை 3 நாட்கள் மூடப்படுகிறது.

மேலும், உத்தரவுகளை மீறுவோரை கண்காணிக்க அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News