தமிழ்நாடு (Tamil Nadu)

தவெக மாநாட்டிற்கு விசிக துணை பொதுச்செயலாளர் வாழ்த்து

Published On 2024-10-27 05:05 GMT   |   Update On 2024-10-27 05:05 GMT
  • ஒரு லட்சம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர்.
  • பல்வேறு பகுதிகளில் இருந்து தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு பிரம்மாண்டமாக இன்று மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.

மாநாட்டு திடலில் சுமார் ஒரு லட்சம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பிரம்மாண்டமாக காட்சி அளிக்கும் மாநாட்டு திடலில் அதிகாலை முதலே பல்வேறு பகுதிகளில் இருந்து தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கொள்கைரீதியான அரசியல் களத்தில் முக்கிய பங்காற்றிட விஜய்யின் இந்த மாநாடு வெற்றி பெற வேண்டும்.

பெரியார், காமராஜர் வேலுநாச்சியார் உள்ளிட்டோரின் படங்களை வைத்து தமிழ் மக்களின் பொது மனநிலையை விஜய் வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார் என்று அவர் கூறினார்.

Tags:    

Similar News