தமிழ்நாடு (Tamil Nadu)

த.வெ.க. மாநாடு: யார் கல்லெறிந்தாலும் தி.மு.க. தாங்கிக் கொள்ளும் - ஆர்.எஸ். பாரதி

Published On 2024-10-27 16:12 GMT   |   Update On 2024-10-27 16:12 GMT
  • தமிழக வெற்றிக் கழகம் முதல் மாநில மாநாட்டு விக்கிரவாண்டியில் நடைபெற்றது.
  • நடிகர் விஜய்-க்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலையில் நடைபெற்று முடிந்தது. மாநாட்டில் பேசிய த.வெ.க. தலைவர் விஜய், அரசியலில் தங்களது எதிரிகள் யார் என்பதை தெளிவுப்படுத்தினார். மேலும், தி.மு.க. மற்றும் பா.ஜ.க. கட்சிகளை மறைமுகமாக சாடினார்.

இது தொடர்பான உரையில், "நாட்டை பாழ்ப்படுத்துகிற, பிளவுவாத அரசியல் செய்கிறவர்கள் தான் தமிழக வெற்றிக் கழகத்தின் முழுமுதற் ஒரே கொள்கை எதிரி, அடுத்து திராவிட மாடல் என்று சொல்லி கொண்டும், பெரியர், அண்ணா பெயரை சொல்லி கொண்டும் தமிழ்நாட்டை சுரண்டி கொள்ளையடிக்கிற ஒரு குடும்பம் நமது எதிரி," என்று விஜய் பேசினார்.

த.வெ.க. மாநாட்டில் விஜய் பேசியது தொடர்பாக தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி பேசும் போது, "தி.மு.க. ஆலமரம் போன்றது. காய்ந்த மரம் தான் கல்லடி படும். யார் கல்லெறிந்தாலும் தாங்கிக் கொள்ளும் சக்தி தி.மு.க.-வுக்கு உள்ளது," என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News