தமிழ்நாடு (Tamil Nadu)
null

தவெக மாநாடு- விஜய் அறிவுறுத்திய கட்டுப்பாடுகளை களைத்தெறிந்த தொண்டர்கள்

Published On 2024-10-27 03:42 GMT   |   Update On 2024-10-27 03:46 GMT
  • தவெக திடலில் முண்டியடித்துக் கொண்டு உள்ளே நுழைந்தனர்.
  • கடைசி 4 வரிசையில் இருந்த சேர்கள் உடைக்கப்பட்டுள்ளன.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு பிரம்மாண்டமாக இன்று மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.

மாநாட்டு திடலில் சுமார் ஒரு லட்சம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பிரம்மாண்டமாக காட்சி அளிக்கும் மாநாட்டு திடலில் அதிகாலை முதலே பல்வேறு பகுதிகளில் இருந்து தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.

மாநாட்டு திடலில் பல்லாயிரக்கணக்கானோர் குவிந்ததால், 10 மணிக்கு மேல் திடலுக்குள் அனுமதிக்கப்பட இருந்த நிலையில், முன்கூட்டியே தொண்டர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

அப்போது, தவெக திடலில் முண்டியடித்துக் கொண்டு உள்ளே நுழைந்தனர். இதில், கடைசி 4 வரிசையில் இருந்த சேர்கள் உடைக்கப்பட்டுள்ளன.

விஐபி சேர்கள், மகளிருக்கான இருக்கைகளையும் ஆண் தொண்டர்கள் ஆக்கிரமித்துள்ளனர்.

மாநாட்டு திடலில் வைக்கப்பட்டுள்ள கியூ ஆர் ஸ்கேன் முறையையும் தொண்டர்கள் பயன்படுத்தவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, மாநாட்டிற்கு வரும் தொண்டர்களுக்கு விஜய், கட்டுப்பாடுகளையும், சில அறிவுறுத்தல்களையும் வழங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News