செய்திகள்

சைபீரியா - ஷாப்பிங் மாலில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 5 பேர் பலி

Published On 2018-03-25 17:23 GMT   |   Update On 2018-03-25 17:23 GMT
ரஷியாவின் சைபீரியா மாகாணத்தில் உள்ள ஷாப்பிங் மாலில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பெண்கள், குழந்தை உள்பட 5 பேர் பரிதாபமாக பலியாகினர்.
மாஸ்கோ:

ரஷியாவின் சைபீரியா மாகாணத்தில் உள்ளது கெம்ரோவோ நகரம். இங்குள்ள ஷாப்பிங் மாலில் பொதுமக்கள் பலர் ஷாப்பிங் செய்து கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென அந்த மாலில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கு குவிந்திருந்த மக்கள் அலறியடித்தபடி அங்குமிங்கும் ஓடினர். தகவலறிந்து அங்கு தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த தீ விபத்தில் சிக்கி 3 பெண்கள், ஒரு குழந்தை உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக பலியாகினர்.
 
மேலும், 30க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் என்றும், அவர்களை அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Tamilnews
Tags:    

Similar News