உலகம் (World)

ரஷ்யா - உக்ரைன் போர்.. அமைதியான முறையில் தீர்வு காணவேண்டும் - புதினுக்கு அழுத்தம் கொடுத்த மோடி

Published On 2024-10-23 01:58 GMT   |   Update On 2024-10-23 01:58 GMT
  • ரஷியா சென்றுள்ள பிரதமர் மோடி ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை நேரில் சந்தித்தார்.
  • அனைத்து பிரச்சனைகளையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும் என்பதே எங்களின் நிலைப்பாடு

பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் ஒன்றிணைத்து உருவாக்கிய அமைப்பு பிரிக்ஸ் கூட்டமைப்பு. இது கடந்த 2009-ம் ஆண்டில் உருவான ஒரு அமைப்பாகும். இதில் 2010-ல் தென் ஆப்பிரிக்கா இணைந்து கொண்டது.

கடந்த ஜனவரி 2024-ல் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்டவையும் இந்த அமைப்பில் இணைய இசைவு தெரிவித்துள்ளன. இதற்கிடையே, 16-வது பிரிக்ஸ் மாநாடு ரஷியாவில் உள்ள காசான் நகரில் நேற்று தொடங்கியது.

இதில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் மோடி நேற்று டெல்லியில் இருந்து ரஷியாவின் காசான் நகர் சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ரஷியா சென்றுள்ள பிரதமர் மோடி ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை நேரில் சந்தித்தார். இருவரும் கைகுலுக்கி, ஒருவரை ஒருவர் கட்டியணைத்து அன்பை பரிமாறிக் கொண்டனர்.

பின்னர் புதினிடம் பேசிய மோடி, "ரஷ்யா - உக்ரைன் பிரச்சனையில் நாங்கள் இரு தரப்பினருடனும் தொடர்பில் இருக்கிறோம். அனைத்து பிரச்சனைகளையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும் என்பதே எங்களின் நிலைப்பாடு. மோதல்களுக்கு அமைதியான தீர்வுகள் இருக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த விவகாரத்தில் அமைதியை ஏற்படுத்துவதற்கு அனைத்து வகையிலும் உதவ இந்தியா எப்போதும் தயாராக உள்ளது" என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News