உலகம்

நியூயார்க்கில் இந்தியா தின பேரணி: சோனாக்சி சின்ஹா, பங்கர் திரிபாதி, ஜாகீர் இக்பால் பங்கேற்பு

Published On 2024-08-19 01:50 GMT   |   Update On 2024-08-19 01:50 GMT
  • நியூயார்க் நகரில் ஆண்டுதோறும் இந்திய தின பேரணி நடத்தப்பட்டு வருகிறது.
  • இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த பேரணி நடத்தப்பட்டு வருகிறது.

அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் பலவேறு அமைப்புகள் ஒன்றாக இணைந்து இந்தியா தின பேரணியை நியூயார்க் நகரில் நடத்தினர். இதில் பாலிவுட் நட்சத்திரங்கள் சோனாக்சி சின்ஹா, பங்கர் திரிபாதி, ஜாகீர் இக்பால் கலந்து கொண்டனர். அதேபோல் மனோஜ் திவாரி எம்.பி.யும் கலந்து கொண்டார்.

ஏராளமானோர் இந்திய கொடி ஏந்திச் சென்றனர். வாகன ஊர்வலம் நடைபெற்றது. பேரணியில் ராமர் கோவில் இடம் பிடித்திருந்தது. மரக்கட்டைகள் மூலம் உருவாக்கப்பட்ட ராமர் கோவில் போன்ற மாதிரி வாகனம் மூலம் எடுத்துக் செல்லப்பட்டது.

தேசபக்தி பாடல்கள் இசைக்கப்பட்டன. கலாச்சார நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. 40-க்கும் மேற்பட் இசைக்குழுக்கள் இந்த பேரணியில் இடம் பெற்றனர். இந்த பேரணி கிழக்கு 38-வது தெருவின் மேடிசன் அவென்யூவில் இருந்து கிழக்க 27-வது தெரு வரை நடைபெற்றது.

இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் நியூயார்க்கில் இந்திய தின பேரணி நடைபெறுகிறது. கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலான நடத்தப்படுகிறது. இந்த வருடம் நடைபெற்றது 42-வது வருட இந்திய தின பேரணியாகும்.

Tags:    

Similar News