உலகம் (World)

சூதாட்ட கடனை அடைக்க மனித எலும்புகளை வைத்து பணம் பறிக்க முயன்ற நபர் கைது

Published On 2024-09-25 16:04 GMT   |   Update On 2024-09-25 16:04 GMT
  • மாமாவின் சில எலும்புகளை எடுத்து, அந்தப் பகுதியில் உள்ள குப்பைக் குவியலில் வைத்தார்.
  • போலீசார் விசாரணை தொடங்கிய நிலையில், இளைஞர் குற்றவாளி என்று கண்டுபிடிக்கப்பட்டது.

வியட்நாமில், சூதாட்ட கடனை அடைப்பதற்காக உறவினரின் கல்லறையை தோண்டி, அவரின் எலும்புகளை வைத்து மிரட்டி பணம் பறிக்க முயன்ற லூ தான் நாம் என்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

வடக்கு வியட்நாமில் உள்ள தான் ஹோ மாகாணத்தைச் சேர்ந்த லூ தான் நாம் கடந்த செப்டம்பர் 9 அன்று தனது மாமாவின் கல்லறையில் 20 செ.மீ ஆழத்தில் குழி தோண்டினார். அவர் தனது மாமாவின் சில எலும்புகளை எடுத்து, அந்தப் பகுதியில் உள்ள குப்பைக் குவியலில் வைத்தார்.

இந்த இளைஞர் அடுத்த நாள் தொலைபேசியில் தனது உறவினரின் மனைவிக்கு மிரட்டல் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். அதில், எலும்புகளுக்குப் பதில் பணம் கேட்ட அவர், போலீஸைத் தொடர்பு கொள்ள வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளார்.

இதையடுத்து, உறவினர்கள் கல்லறைக்குச் சென்று ஆய்வு செய்தனர். அங்கு, உண்மையாகவே சவப்பெட்டியில் துளை இருப்பதைக் கண்டுபிடித்தனர். பிறகு, உடனடியாக சட்ட அமலாக்கப் பணியாளர்களை அணுகினர்.

இதுகுறித்து போலீசார் விசாரணை தொடங்கிய நிலையில், இளைஞர் குற்றவாளி என்று கண்டுபிடிக்கப்பட்டது. செப்டம்பர் 12 அன்று இளைஞர் கடுமையான அவமதிப்பு மற்றும் மிரட்டி பணம் பறித்ததற்காக கைது செய்யப்பட்டார்.

தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்ட அவர், பெரும் கடனில் இருந்ததால் இந்த முயற்சியை எடுத்ததாக போலீசாரிடம் தெரிவித்தார். அவரது தண்டனை குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை.

போலீசார் எலும்புகளை கண்டுபிடித்து அவரது உறவினரிடம் ஒப்படைத்தனர்.

வியட்நாமிய பாரம்பரியத்தில் கல்லறை அவமதிப்பு மிகவும் அவமரியாதையாக கருகல்லறையை தோண்டி எடுப்பது உயிரிழந்தவரை தொந்தரவு செய்வதாகவும், உயிருடன் இருப்பவர்களுக்கு பிரச்னையை உருவாக்குவதாகவும் வியட்நாம் மக்கள் நம்புகின்றனர்.

Tags:    

Similar News