உலகம்

ஜப்பானில் இதுவரை இல்லாத அளவிற்கு அரிசிக்கு தட்டுப்பாடு: காரணம் தெரியுமா?

Published On 2024-08-28 05:52 GMT   |   Update On 2024-08-28 07:24 GMT
  • பற்றாக்குறை நிலைமை விரைவில் தீர்க்கப்படும்.
  • செப்டம்பர் இறுதிக்குள் 40 சதவீத பயிர் கிடைக்கும் நிலையில் புதிய அறுவடை பருவம் தொடங்கியுள்ளது என்றார்.

நிலநடுக்கம் மற்றும் சூறாவளியால் அதிக அளவில் பாதிக்கப்படும் நாடுகளில் ஒன்று ஜப்பான்.

ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சூறாவளியால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் பிரதான உணவுகளில் ஒன்றான அரிசிக்கு முன்எப்போதும் இல்லாத வகையில் தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

டோக்கியோவில் உள்ள பிரபலமான சூப்பர் மார்க்கெட்டின் கிளார்க், "இந்த கோடையில் வழக்கமான அரிசியின் பாதி அளவை மட்டுமே கொள்முதல் செய்ய முடியும். மேலும் அரிசி பைகள் விரைவாக விற்றுத் தீர்ந்துவிடும்" எனத் தெரிவித்தார்.

இதனிடையே, மளிகை கடைக்காரர் ஒருவர், தங்கள் வாடிக்கையாளர்களிடம் ஒரு நாளைக்கு ஒரு பை அரிசி மட்டுமே வாங்கிக்கொள்ள அறிவிறுத்தியுள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.

இந்த மாத தொடக்கத்தில் "மெகா நிலநடுக்கம்" மற்றும் பல சூறாவளிகள் ஏற்படக்கூடும் என்று அரசாங்கம் எச்சரித்ததை அடுத்து மக்கள் தங்கள் வீடுகளில் அரிசியை வாங்கி வைக்கத் தொடங்கினர். ஜப்பான் முழுவதும் உள்ள கடைகளில் அரிசி இல்லாமல் போனது அல்லது அரிசி தட்டுப்பாடு ஏற்படுவதற்கான மற்றொரு காரணம் ஓபன் விடுமுறை.

இது தவிர, வெப்பமான காலநிலை மற்றும் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக குறைந்த அறுவடைகள், அத்துடன் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பதிவு எண்ணிக்கையுடன் தொடர்புடைய தேவை அதிகரித்தது, மேலும் அரிசி பற்றாக்குறையை ஏற்படுத்தியது.

அரிசி தட்டுப்பாடு தொடர்பாக விவசாயத்துறை அமைச்சர் டெட்சுஷி சகாமோடோ கூறுகையில், பற்றாக்குறை நிலைமை விரைவில் தீர்க்கப்படும். அதுவரை மக்கள் அமைதியாக இருக்க வேண்டும். செப்டம்பர் இறுதிக்குள் 40 சதவீத பயிர் கிடைக்கும் நிலையில் புதிய அறுவடை பருவம் தொடங்கியுள்ளது என்றார்.

Tags:    

Similar News