உலகம் (World)

2024-ம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு

Published On 2024-10-08 10:14 GMT   |   Update On 2024-10-08 10:14 GMT
  • இயற்பியலுக்கான நோபல் பரிசுக்கு 2 விஞ்ஞானிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
  • அமெரிக்கா, இங்கிலாந்தைச் சேர்ந்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட உள்ளது.

மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான துறைகளில் சர்வதேச சமூகத்திற்கு சிறப்பான பங்களிப்பு செய்த சாதனையாளர்களுக்கான நோபல் பரிசு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன.

அதன்படி 2024-ம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் நேற்று முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன. நேற்று இரு அமெரிக்கர்களுக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று இயற்பியலுக்கான நோபல் பரிசுக்கு 2 விஞ்ஞானிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மனித மூளையைப் போல இயங்க கணினிக்கு கற்றுத்தரும் மெஷின் லேர்னிங் கண்டுபிடிப்புக்காக அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் ஹாப்பீல்டு, இங்கிலாந்தைச் சேர்ந்த ஜெப்ரி ஹிண்டன் ஆகியோர் கூட்டாக தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Tags:    

Similar News