உலகம் (World)
null

காசா போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் சம்மதித்தால் சண்டையை நிறுத்த தயார்: ஹமாஸ்

Published On 2024-10-25 03:50 GMT   |   Update On 2024-10-25 03:52 GMT
  • லெபனான் மீதும் இஸ்ரேல் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது.
  • சபிதீனும் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.

பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீதான இஸ்ரேலின் போர் ஒரு ஆண்டுக்கு மேலாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட 44 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

இஸ்ரேல்-காசாவின் ஹமாஸ் அமைப்பு இடையேயான போரில் லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா இயக்கம் ஹமாசுக்கு ஆதரவாக உள்ளது. அந்த இயக்கம் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துகிறது.

இதையடுத்து லெபனான் மீதும் இஸ்ரேல் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். மேலும் அந்த இயக்கத்தின் முக்கிய தளபதிகளும் கொல்லப்பட்டுள்ளனர். நஸ்ரல்லா கொல்லப்பட்டதையடுத்து ஹிஸ்புல்லா இயக்கத்தின் புதிய தலைவராக அவரது உறவினர் ஹஷேம் சபிதீன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கிடையே சபிதீனும் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.

இந்தநிலையில், இஸ்ரேல் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளும் என்றும் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான நீண்ட கால முயற்சிகள் வேகமடைவதால் போர் நிறுத்தம் ஏற்பட்டால் சண்டையை நிறுத்துவமாக ஹமாஸ் உறுதியளித்துள்ளது.

இதனிடையே, நேற்று கெய்ரோவில் எகிப்திய அதிகாரிகளுடன் காசா போர் நிறுத்தம் தொடர்பான "யோசனைகள் மற்றும் முன்மொழிவுகளை" தோஹாவை தளமாகக் கொண்ட தலைமைத்துவ குழு விவாதித்ததாக ஹமாஸின் மூத்த அதிகாரி கூறினார்.

மேலும் அவர் கூறியதாவது:- "ஹமாஸ் சண்டையை நிறுத்தத் தயாராக உள்ளது, ஆனால் இஸ்ரேல் ஒரு போர் நிறுத்தத்திற்கு உறுதியளிக்க வேண்டும். காசா பகுதியிலிருந்து வெளியேற வேண்டும். இடம் பெயர்ந்த மக்களைத் திரும்ப அனுமதிக்க வேண்டும். தீவிர கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொள்ள வேண்டும் மற்றும் காசாவுக்குள் மனிதாபிமான உதவிகளை அனுமதிக்க வேண்டும். கெய்ரோவில் நடந்த பேச்சுவார்த்தைகள், போர்நிறுத்த பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கு எகிப்தின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதி" என்றார்.

Tags:    

Similar News