உலகம் (World)

சீனாவில் நிலச்சரிவு: கோவிலுடன் மண்ணில் புதைந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர்

Published On 2024-06-22 12:20 GMT   |   Update On 2024-06-22 12:20 GMT
  • கனமழையால் நேற்று மட்டும் சீனாவில் 47 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • நூற்றுக்கணக்கான பாலங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.

சீனாவில் கனமழை பெய்து வருகிறது. இந்த தீவிரமான மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது

சீனாவில் ஃபுஜ்ஜியான் மாகாணத்தில் மழைக்காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேரை காணவில்லை. மீட்புக்குழு அவர்களை தேடிவந்தனர். இந்த நிலையில் அருகில் இருந்த கோவில் மண்ணில் புதைந்ததை கண்டுபிடித்தினர். அந்த கோவில் இடிபாட்டிற்குள் ஆறுபேர் உடல் கிடந்ததை கண்டுபிடித்து மீட்டனர்.

கனமழை காரணமாக வீட்டில் இருந்து உயரமான பகுதியில் இருந்து கோவிலில் தஞ்சம் அடைந்துள்ளனர். நிலச்சரிவு காரணமாக கோவில் மண்ணில் புதைந்தபோது இவர்கள் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

நேற்று குவாங்டாங் மாகாணத்தில் கனமழை காரணமாக 47 பேர் உயிரிழந்தனர். கனமழை காரமாக 100-க்கும் மேற்பட்ட மேம்பாலங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. விளைநிலைங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளன. புறநகர் டவுன்பகுதிகளை இணைக்கும் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

Tags:    

Similar News