உலகம்

பயணிகள் சர்வீஸ் கட்டணத்தை உயர்த்திய சிங்கப்பூர் விமான நிலையம்

Published On 2024-07-01 14:25 GMT   |   Update On 2024-07-01 14:25 GMT
  • செலிடார் விமான நிலையத்தை பயன்படுத்தும் பயணிகள் 49 டாலர் செலுத்த வேண்டும்.
  • வாடகை விமான நிறுவனங்கள், ஃப்ளையிங் ஸ்கூல் போன்றவைக்கும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் செலிடார் விமான நிலையத்தில் விமானப் பயணிகளின் சேவை கட்டணம் மற்றும் விமானத்தின் புறப்பாடுக்கான கட்டணத்தை சிங்கப்பூர் விமான போக்குவரத்து ஆணையம் மற்றும் சாங்கி விமானம் குரூப் அதிகரித்துள்ளது.

சாங்கி ஏர்போர்ட் குரூப்பிற்கான பயணிகளுக்கான சேவை மற்றும் பாதுகாப்பு கட்டணம் 25.90 டாலரில் இருந்து 41 டாலராக உயர்த்தப்பட்டுள்ளது. இன்று முதல் இந்த கட்டணத் தொகை அதிகரித்துள்ளது. 2025 ஏப்ரில் 44 டாலராகவும், 2026 ஏப்ரலில் 47 டாலராகவும் உயரும்.

செலிடார் விமான நிலையத்தை பயன்படுத்தும் பயணிகள் 49 டாலர் அதிகமாக செலுத்த வேண்டும். 2025-ல் 29 டாலரில் இருந்து 52 டாலராகவும், 2026-ல் 55 டாலராகவும் உயர்த்தப்பட இருக்கிறது.

வாடகை விமான நிறுவனங்கள், பிளையிங் ஸ்கூல் (flying schools) நடத்துபவர்கள் கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் கட்டணம் செலுத்தாமல் இருந்தனர். தற்போது கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஒரு விமானம் புறப்பட்டுச் செல்ல குறைந்தபட்சமாக 1,100 டாலர் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News