உலகம்

செப்டம்பரில் இலங்கை அதிபர் தேர்தல் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Published On 2024-07-26 07:52 GMT   |   Update On 2024-07-26 08:33 GMT
  • கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறினார்.
  • தேர்தல் தேதியை அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இலங்கையில் கடந்த 2022-ல் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக பொதுமக்களிடையே மிகப்பெரிய புரட்சி வெடித்தது. இதனையடுத்து அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறி சிங்கப்பூரில் தஞ்சமடைந்தார். அங்கிருந்து தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதைத்தொடர்ந்து இலங்கையின் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றார். இவரது பதவிக்காலம் வருகிற நவம்பர் மாதத்தோடு முடிவடைகிறது. இதன் காரணமாக அடுத்த அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிப்பை அந்நாட்டு தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

அதன்படி வருகிற செப்டம்பர் 17 ஆம் தேதியில் இருந்து அக்டோபர் 16 ஆம் தேதிக்குள் இலங்கையில் அதிபர் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது இலங்கை அதிபர் தேர்தல் தேதியை அந்நாட்டு தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.

அந்த வகையில் இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 21 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. ஆகஸ்ட் 15 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் துவங்குகிறது. இந்த நேரத்தில் தற்போது அதிபராக உள்ள ரணில் விக்ரமசிங்கே போட்டியிடுவதாக அறிவித்து இருக்கிறார்.

இதேபோல் இலங்கையின் முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகாவும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்து இருக்கிறார். 

Tags:    

Similar News