உலகம் (World)

மெக்சிகோ: பூங்காவில் மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 7 பேர் பலி

Published On 2023-04-16 07:10 GMT   |   Update On 2023-04-16 07:10 GMT
  • மத்திய மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள தண்ணீர் பூங்காவில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.
  • துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் தப்பி ஓடி விட்டனர்.

மெக்சிகோசிட்டி:

மத்திய மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள தண்ணீர் பூங்காவில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.அங்கிருந்த மக்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.

இதனால் மக்கள் அலறியடித்து ஓடினர். இந்த துப்பாக்கி சூட்டில் 7 வயது சிறுவன், 3 பெண்கள் உள்பட 7 பேர் பலியானார்கள். ஒருவர் காயம் அடைந்தார். துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் தப்பி ஓடி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News