உலகம் (World)

பஞ்சாப் கபடி பயிற்சியாளர் பிலிப்பைன்சில் சுட்டுக்கொலை

Published On 2023-01-04 05:47 GMT   |   Update On 2023-01-04 07:38 GMT
  • பஞ்சாப் மாநிலம் மோகா மாவட்டத்தை சேர்ந்த கபடி பயிற்சியாளர் குர்பிரித்சிங்.
  • மணிலாவில் இருந்து வீடு திரும்பி கொண்டு இருந்த குர்பிரித்சிங்கை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.

மணிலா:

பஞ்சாப் மாநிலம் மோகா மாவட்டத்தை சேர்ந்த கபடி பயிற்சியாளர் குர்பிரித்சிங். அவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா சென்றார். அங்கு வியாபாரம் செய்து கொண்டு இளம் வீரர்களுக்கு கபடி பயிற்சியும் அளித்தார்.

இந்த நிலையில் மணிலாவில் இருந்து வீடு திரும்பி கொண்டு இருந்த குர்பிரித்சிங்கை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். கொலைக்கான காரணம் தெரியவில்லை. உடலை இந்தியா கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News