உலகம் (World)
null

பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி தோற்க வேண்டும்- பாகிஸ்தான் முன்னாள் மந்திரி விருப்பம்

Published On 2024-05-30 05:40 GMT   |   Update On 2024-05-30 05:43 GMT
  • பாகிஸ்தானில் இந்தியா மீது வெறுப்பு எதுவும் கிடையாது.
  • பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். கொள்கைகள் பாகிஸ்தான் மீது வெறுப்பைத் தூவுகின்றன.

இஸ்லாமாபாத்:

இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் நடந்து வருகிறது. இதில் 7-வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு வருகிற 1-ந்தேதி நடக்கிறது.

ஓட்டு எண்ணிக்கை 4-ந்தேதி நடக்கிறது. இந்த நிலையில் தேர்தலில் பிரதமர் மோடி தோற்க வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் மந்திரி பவாத் சவுத்ரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

இந்தியாவில் நடந்து வரும் பாராளுன்றத் தேர்தலில் பிரதமர் மோடி தோற்க வேண்டும்.


இந்தத் தேர்தலில் பிரதமர் மோடி தோற்கடிக்கப்பட வேண்டியது அவசியமாகும். இந்தியா, பாகிஸ்தானில் பயங்கரவாதம் வேரறுக்கப்பட வேண்டுமானால் இந்தியாவும், பாகிஸ்தானும் நெருங்கி வரவேண்டும். அதற்கு இந்தத் தேர்தலில் மோடி தோற்கடிக்கப்பட வேண்டும். பாகிஸ்தானில் இந்தியா மீது வெறுப்பு எதுவும் கிடையாது. ஆனால் பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். கொள்கைகள் பாகிஸ்தான் மீது வெறுப்பைத் தூவுகின்றன. இந்தியாவிலுள்ள வாக்காளர்கள் முட்டாள்கள் அல்ல. முன்னேறிய, வளர்ச்சி பெற்ற நாடாக இந்துஸ்தானம் செல்ல வேண்டும் என்பது எனது விருப்பம்.

மோடியைத் தோற்கடிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு வாழ்த்துகள். அது ராகுல் காந்தியோ அல்லது அரவிந்த் கெஜ்ரிவாலோ அல்லது மம்தா பானர்ஜியோ அவர்களுக்கு எனது வாழ்த்துகள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News