உலகம்

ராஜினாமா இல்லை: நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவேன்- நேபாள பிரதமர்

Published On 2024-07-02 13:00 GMT   |   Update On 2024-07-02 13:00 GMT
  • நேபாள பிரதமராக இருக்கும் புஷ்பா கமல் தாஹல் பிரசந்தாவுக்கு ஒலி ஆதரவு வழங்க மறுப்பு.
  • நேபாள காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்க ஒப்பந்தம்.

நேபாள பிரதமராக இருக்கும் புஷ்பா கமல் தாஹல் பிரசந்தாவின் பதவிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நேபாள காங்கிரஸ் கட்சியும், சிபிஎன்- யுஎம்எல் கட்சியும் தற்போது புதிய கூட்டணி ஆட்சி அமைக்க தீர்மானித்துள்ளதுதான் இதற்கு காரணம்.

நேபாள காங்கிரஸ் கட்சித் தலைவர் ஷெர் பகதூர் தெயுபா கம்யூனிஸ்ட் கட்சியான நேபாளம் ஒருங்கிணைந்த மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (CPN-UML) கட்சியுடன் ஒருங்கிணைந்து தேசிய ஒருமித்த அரசாங்கம் அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

இதனால் பிரசண்டா ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரதமர் பதவியை ராஜினாமா செய்யமாட்டேன். நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவேன் எனத் தெரிவித்துள்ளார்.

நேபாள காங்கிரஸ் கட்சி பாராளுமன்றத்தில் 89 இடங்களும் பெரிய கட்சியாக விளங்குகிறது CPN-UML-க்கு 78 இடங்கள் உள்ளன. மெஜாரிட்டிக்கு 138 இடங்கள் தேவை. ஆனால் இரண்டு கட்சிகளுக்கும் 167 இடங்கள் உள்ளன.

தெயுமா (78 இடங்கள்), ஒலி (72) ஆகியோர் பிரதமர் பதவியை பகிர்ந்து கொள்வதாக முதலில் தெரிவித்தனர். பிரதமர் பிரசண்டா மற்றும் CPN-UML தலைவர் ஒலிக்கும் இடையில் தற்போது நடைபெற்று வரும் கூட்டணி ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதில் தோல்வி ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் பிரசண்டாவின் கம்யூனிஸ்ட் கட்சி (Maoist Centre) செயலாளர் கணேஷ் ஷா இதுகுறித்து கூறுகையில் "கூட்டணி ஆட்சியை கவிழ்த்து, நாட்டில் நிலையற்ற தன்மையை உருவாக்க சதி செய்யப்படுகிறது. அரசு ஊழலுக்கு முடிவு கட்டி, நல்லாட்சியை அறிமுகப்படுத்தியபோது இந்த சதி நடைபெற்றுள்ளது" என்றார்.

பிரசண்டா தனது ஒன்றரை ஆண்டு பதவி காலத்தின்போது பாராளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் 3 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

நேபாளம் பாராளுமன்ற அரசியலமைப்பின்படி, பிரதமர் நம்பிக்கை வாக்கெடுப்பு கோர 30 நாட்கள் வரை கேட்க முடியும். இதனால் பிரசண்டாவிற்கு அரசியல் சூழ்சியை மேற்கொள்ள காலஅவகாசம் கிடைக்கும் என கூறப்படுகிறது.

Tags:    

Similar News