டென்னிஸ்

குரோசியா ஓபன்: ரஷிய வீரர் ரூப்லெவ் காலிறுதிக்கு முன்னேற்றம்

Published On 2024-07-24 14:30 GMT   |   Update On 2024-07-24 14:30 GMT
  • குரோசியா ஓபன் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு சுற்று நடைபெற்றது.
  • இதில் ரஷிய வீரர் ரூப்லெவ் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

ஜாக்ரெப்:

குரோசியா ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு சுற்று நேற்று நடைபெற்றது. இதில் ரஷிய வீரர் ஆண்ட்ரே ரூப்லெவ், அர்ஜெண்டினாவின் கேமிலோ யூகோ உடன் மோதினார்.

இந்தப் போட்டியின் முடிவில் ரூப்லெவ் 6-4, 7-5 என்ற நேர் செட்கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

நாளை நடைபெறும் காலிறுதியில் ரூப்லெவ், ஹங்கேரி வீரர் பேபியன் மரோஜானை சந்திக்கிறார்.

Tags:    

Similar News