டென்னிஸ்

குரோசியா ஓபன்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் முசெட்டி

Published On 2024-07-27 11:17 GMT   |   Update On 2024-07-27 11:17 GMT
  • குரோசியா ஓபன் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அரையிறுதி சுற்று நடந்தது.
  • இதில் இத்தாலி வீரர் முசெட்டி வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

ஜாக்ரெப்:

குரோசியா ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்றுகள் நேற்று நடந்தன.

இதில் இத்தாலி வீரர் லாரன்சோ முசெட்டி, செக் வீரர் ஜாகுப் மென்சிக்குடன் மோதினார்.

இந்தப் போட்டியின் முடிவில் முசெட்டி 6-4, 6-1 என்ற நேர் செட்கணக்கில் வெற்றி பெற்று இறுதிக்கு முன்னேறினார்.

இறுதிப்போட்டியில் முசெட்டி, அர்ஜெண்டினாவின் பிரான்சிஸ்கோ செரண்டலோவை சந்திக்கிறார்.

Tags:    

Similar News