டென்னிஸ்

குரோசியா ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறியது யூகி பாம்ப்ரி ஜோடி

Published On 2024-07-24 13:03 GMT   |   Update On 2024-07-24 13:03 GMT
  • குரோசியா ஓபன் தொடரில் ஆண்கள் இரட்டையர் பிரிவு 2வது சுற்று நடைபெற்றது.
  • இதில் யூகி பாம்ப்ரி ஜோடி வென்று காலிறுதிக்கு முன்னேறியது.

ஜாக்ரெப்:

குரோசியா ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது. ஆண்கள் இரட்டையர் பிரிவு 2வது சுற்று நேற்று நடைபெற்றது.

இதில் நம்பர்-3 அந்தஸ்து பெற்ற இந்தியாவின் யூகி பாம்ப்ரி, பிரான்சின் அல்பானோ ஜோடி, ஸ்லோவோகியாவின் ஜோஸ் கோவாலிக், அர்ஜெண்டினாவின் கேமிலோ யூகோ ஜோடியைச் சந்தித்தது.

இந்தப் போட்டியின் முடிவில் பாம்ப்ரி ஜோடி 6-3, 6-2 என்ற நேர் செட்கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

Tags:    

Similar News